💕 15 💕

5.2K 261 44
                                    

“ரொம்ப நல்லா இருக்கு அத்தை உங்க சமையல்..” என பாராட்டியபடியே ரஞ்சன் ரசித்து உண்பதை பார்க்கையில் சுசீலாவின் மனம் மகிழ்ந்தது.

ரஞ்சன் இங்கு வர ஒத்துக்கொண்டதே பெரும் மகிழ்ச்சியை தர.. அவனுக்கு எந்த வசதிக்குறைவும் இல்லாமல் பார்த்து பார்த்து எல்லாவற்றையும் செய்தான் பிரபா.

ரஞ்சன் தன் அம்மாவிடமும் அண்ணனிடமும் உரிமையுடன் பழகுவதை பார்க்கும் போது.. தன்னிடமும் தோழி என்ற உரிமையை கடந்து மனைவி என்ற உரிமையுடன் எப்போது பழகுவான் என்ற ஏக்கம் தோன்றியது உமாவுக்கு.

அன்று இரவு கட்டிலில் அமர்ந்தபடி போனை பார்த்துக் கொண்டிருந்தான் ரஞ்சன். உமா பால் எடுத்துவந்து ரஞ்சனுக்கு கொடுத்துவிட்டு.. தரையில் படுப்பதற்கு போர்வை ஒன்றை எடுத்து விரித்தாள்.

“எதுக்கு உமா..” என ரஞ்சன் கேள்வியாய் உமாவை பார்த்தான்.

“அ.. அது..” என உமா தடுமாற.. “கீழ ஏன் படுக்கிற.. கட்டில்லே படு..” என்றான் ரஞ்சன்.

“உ.. உங்களுக்கு கம்பர்ட்டபிளா இருக்காதுல்ல..” என உமா சொல்ல.. “தாராளமா இரண்டு பேர் படுக்கலாம் உமா.. நீயும் கட்டில்லே படு..” என சொன்னான் ரஞ்சன்.

உமா தயக்கத்துடனே நிற்க.. ரஞ்சனின் பார்வை அவள் தயக்கத்தை நீக்கியது.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடி விழிகளை மூடினர்.

அங்கே ரஞ்சனின் அறையில் இருந்த இடைவெளி இப்போது சற்று குறைந்தது போல.. இதுவும் குறைந்திட வேண்டும்.. இருவரும் மனதாலும் ஒன்றாகிட வேண்டும் என எண்ணியபடியே உறங்கினாள் உமா.

“ஏற்கனவே உமாவின் ஆசைகளை நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறேன்.. இதில் இரண்டு நாள் என்னால் தரையில் படுக்கும் சிரமம் வேறா.. வேண்டாம்..”  என எண்ணிய ரஞ்சன் விழிகளை திறந்தான்.

அறையில் பரவியிருந்த மெல்லய வெளிச்சத்தில் உறக்கத்தில் இருந்த உமாவை பார்த்தான் ரஞ்சன்.

உள்ளங்கவர்ந்த கள்வனவன்..Where stories live. Discover now