Some more chapters for you all..💕 Read and tell your comments 💕
கெஞ்சல்களும் கொஞ்சல்களுமாக நீண்டது அந்த இரவு உமாவுக்கும் ரஞ்சனுக்கும்.
தன் தோள் சாய்ந்து உறங்குபவளின் தலையை வருடி முத்தமிட்டான் ரஞ்சன். தன் மனதை தன்னாலே புரிந்து கொள்ள முடியாமல் இத்தனை நாள் இருந்ததை எண்ணிப் பார்க்கையில் சிரிப்பாக கூட இருந்தது.
இன்றும் கூட உமா தன் உள்ளத்தை வெளிப்படுத்தி இருக்காவிடில்.. தன் மனமே புரியாத முட்டாளாக தான் இருந்திருப்பேன் என எண்ணிக் கொண்டிருந்தான் ரஞ்சன்.
முதல் நாள் கைகுலுக்க நீட்டிய கையை கண்களில் சிறு அலட்சியத்துடன் உமா பார்த்த விதம் ரஞ்சனின் மனதில் நிறைந்திருந்தது.
அதை மனதில் வைத்துக்கொண்டு என்ன சொல்வானோ என தடுமாறிய உமாவின் கபடற்ற முகம்..
சுஜியின் எழுத்துக்களை வாசித்ததும் கண்கள் கலங்கிய உமாவின் முகம்.. என தன்னையே அறியாமல் உமாவை ரசித்த நொடிகள் எல்லாம் ரஞ்சனின் உள்ளத்தை நிறைத்திருக்க.. உமாவை இன்னும் இறுக்கமாக கட்டிக்கொண்டு மனநிம்மதியோடு உறங்கினான் ரஞ்சன்.
காலையில் கண்விழித்ததும் ரஞ்சன் முகத்தை பார்த்தாள் உமா. அவன் வலிய கரங்களின் அணைப்பில் இருப்பதை எண்ணி உள்ளம் மகிழ்ந்தது.
ரஞ்சனின் நெற்றியில் தன் இதழ் பதித்துவிட்டு.. அவன் அணைப்பில் இருந்து விலக முயற்சித்தாள் உமா.
ரஞ்சனின் அணைப்பு மேலும் இறுக்கமாவதை உணர்ந்து.. அவன் முகம் பார்க்க.. “நெத்தியில கொடுத்தது பத்தலை..” என்றான் ரஞ்சன் குறும்புடன்.
லேசாக அவனை முறைத்தபடி விலக முயன்றாள் உமா. ஆனால் ரஞ்சனின் அணைப்பில் இருந்து விலக முடியாமல் உமா தவிக்க.. மீண்டும் காதலில் தங்களை தொலைக்க தொடங்கினர் இருவரும்.
ஒருவழியாக வழக்கமான காலை உணவு நேரத்துக்கு இருவரும் அறையில் இருந்து வெளியே வந்தனர்.
“எல்லாம் உங்களால தான்.. அத்தையும் பாட்டியும் என்ன நினைப்பாங்க..” என ரஞ்சனை செல்லமாக கொஞ்சலாக திட்டிக் கொண்டிருந்தாள் உமா.