💕 16 💕

6.8K 283 115
                                    

ரஞ்சன் தன்னிடம் இருந்து விலகிச் செல்லும் காரணம் அவனுடைய கடந்த கால வாழ்வின் நினைவு தான் என எண்ணியிருந்த உமா.. அதைப்பற்றி அறிந்து கொள்ள விரும்பினாள்.

ரஞ்சனை தவிர வேறு யாரிடம் அதைப்பற்றி கேட்க முடியும்.. ரஞ்சனிடமே கேட்டாள் உமா.

"நா.. நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்.." என உமா தொடங்க.. "ம்.. கேளு உமா.." என்ற ரஞ்சன்

அவளை பார்த்தான்.

"அ.. அது.. நீ.. நீங்க லவ் பண்ணதா சொன்னீங்கல்ல.. அவங்கள பத்தி சொல்லுங்களேன்.." என உமா கேட்டாள்.

சில நிமிடங்கள் ரஞ்சனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

"நானே அதை மறந்துட்டு வாழ விரும்புறேன்.. அதை ஏன் பேசணும்.. விட்டுடேன் உமா ப்ளீஸ்.." என ரஞ்சன் சொல்ல.. அதற்கு மேல் வற்புறுத்த உமாவுக்கு மனமில்லை.

ஏதோ யோசித்தவனாக.. "ஏன் உமா திடீர்னு அதைப்பத்தி கேட்கிற.." என கேட்டான் ரஞ்சன்.

"அ.. அது.. நீ.. நீங்க எவ்ளோ க்ளோஸ்னு தெரிஞ்சுக்க தான்.." என்றாள் உமா.

"க்ளோஸ்னா.. அஸ் யூசுவல் எல்லா லவ்வர்ஸ் மாதிரி தான்.." என ரஞ்சன் சொல்ல.. "நான் இந்த அர்த்தத்துல கேட்கலையே.. ஆனா இதை எப்டி கேட்கிறது.." என புரியாமல் விழித்தாள் உமா.

அவள் முகத்தில் இருந்தே அதை உணர்ந்த ரஞ்சன்.. "வேற எதுவும் மீன் பண்றீயா உமா.." என கேட்டான்.

"அ.. அதெல்லாம் ஒன்னுமில்லை.." என உமா தயங்க.. "கேளு உமா.. என்ன தெரிஞ்சுக்கணும்.." என கனிவாக கேட்டான் ரஞ்சன்.

"அ.. அது.. பிசிக்கலா நீங்க.." என தயங்கி தயங்கி உமா கேட்க.. அவள் தயக்கத்தை உணர்ந்த ரஞ்சன் லேசாக புன்னகைத்தான்.

"ஒரே ஒரு டைம்.." என ரஞ்சன் தொடங்க.. உமா அதிர்ச்சியுடன் விழிகளை விரித்தாள்.

"ஹே.. நீ நினைக்கிற மாதிரி லாம் எதுவும் இல்லை.. ஒரே ஒரு டைம் கிஸ் பண்ணிருக்கோம்னு சொல்ல வந்தேன்.." என ரஞ்சன் பதற்றத்துடன் சொல்ல.. அவன் சொன்ன விதம் சிரிப்பை வரவழைத்தாலும் உள்ளம் உறுத்தியது.

உள்ளங்கவர்ந்த கள்வனவன்..Where stories live. Discover now