😍😘

8.4K 333 171
                                    

தன் மனதில் இருக்கும் காதலை.. பிரபாவிடமோ தன் குடும்பத்தினரிடமோ வாயை திறந்து சொன்னால் தான் அவர்களுக்கு தெரியும் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாமல்.. மகதி தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தாள்.

சில தினங்கள் கடந்திருந்த நிலையில் பிரபாவின் ஷோரூம் திறப்பு விழா நடைபெற இருந்தது.

பிரபாவை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு என மகிழ்ந்திருந்தாள் மகதி. அவள் சந்தோஷத்தை பறிக்க ஒரு போட்டோவுடன் அங்கே வந்த ரஞ்சன் தாத்தா பாட்டி.. அப்பா அம்மா.. உமா எல்லாரையும் அழைத்தான்.

என்ன விஷயம் என கேட்டதும்.. கையிலிருந்த போட்டோவை காட்டி.. பிரபா அத்தானுக்கு பார்த்திருக்கிற பொண்ணு.. என சொன்னான் ரஞ்சன்.

“ம்.. நல்லா இருக்கா.. பிரபாவுக்கு பொருத்தமா இருப்பா..” என ஒவ்வொருவராக.. மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொண்டிருக்க.. எரிச்சலுடன் மகதி அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“மகதி.. நீயும் பாரு..” என ரஞ்சன் சொல்ல.. போட்டோவை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்த உமா.. மகதியிடம் போட்டோவை நீட்டினாள்.

போட்டோவை கையில் வாங்கிய மகதி போட்டோவை பார்க்காமல் எல்லோரையும் பார்த்தாள். எதுக்கு இப்படி செய்கிறாள் என புரியாமல் எல்லோரும் அவளை பார்க்க.. போட்டோவை கிழித்தாள் மகதி.

எல்லோரும் அதிர்ச்சியுடன் மகதியை பார்க்க..  “மகதி எதுக்கு இப்டி பண்ற..” என அதட்டலாக மேகலா கேட்டார்.

“எனக்கு பிரபா அத்தானை பிடிச்சிருக்கு.. நான் தான் பிரபா அத்தானை கல்யாணம் பண்ணிப்பேன்.. இந்த பொண்ணு பார்க்கிறது.. பன்னு பார்க்கிறதெல்லாம் இதோட நிறுத்திக்கோங்க..”என கோபத்துடன் பொரிந்து தள்ளிவிட்டு தன்னறைக்குள் சென்று விட்டாள் மகதி.

பெரியவர்களுக்கும் உமாவுக்கும் இது அதிர்ச்சியாக இருக்க.. ரஞ்சன் மட்டும் சிரித்துக் கொண்டிருந்தான்.

அதிர்ச்சியில் இருந்து மீண்ட உமா.. சிரித்துக் கொண்டிருந்த ரஞ்சனை பார்த்து.. “உங்களுக்கு முன்னாடியே தெரியுமா..”என கேட்டாள்.

உள்ளங்கவர்ந்த கள்வனவன்..Where stories live. Discover now