4.5K 232 45
                                    

“லீவுக்கு கொடைக்கானல் போகலாமானு அத்தை கேட்க சொன்னாங்க..” என உமா சொல்ல.. “ம்.. எல்லோரும் போகட்டும்.. நாம போக வேண்டாம்..” என்றான் ரஞ்சன்.

புரியாமல் விழித்தபடி.. “ஏ.. ஏன்..” என உமா கேட்க.. குறும்புடன் நகைத்தான் ரஞ்சன்.

“நமக்கு இங்க தான் நிறைய வேலை இருக்கு..” என்ற ரஞ்சன் கள்ளச்சிரிப்புடன் உமாவை நெருங்கினான்.

அவன் எண்ணம் புரிந்த உமா.. மெல்ல பின்னால் நகர்ந்தபடியே.. “இங்க என்ன வேலை இருக்கு..” என கேட்டாள்.

“அது சஸ்பென்ஸ்.. நான் அப்பா அம்மா கிட்ட சொல்லிடுறேன்.. நீ போ..” என ரஞ்சன் சொல்ல.. சரியென தலையாட்டிவிட்டு சென்றாள் உமா.

ரஞ்சன் பெரியவர்களிடம் என்ன சொன்னானோ.. உமாவும் ரஞ்சனும் மட்டும் கொடைக்கானல் வராதது குறித்து யாரும் எதுவும் கேட்கவில்லை.

என்ன வேலை.. எதற்காக கொடைக்கானல் செல்லவில்லை.. அத்தை மாமாவிடம் என்ன சொன்னீர்கள் என உமா கேட்ட எந்த கேள்விக்கும் ரஞ்சன் பதில் அளிக்கவில்லை.

சில தினங்கள் கடந்திருந்த நிலையில் ரஞ்சன் வீட்டுக்கு வந்தான் பிரபா.

பிரபாவை கண்டதும் உற்சாகத்துடன் வரவேற்றாள் மகதி. “அண்ணா.. அண்ணி.. யார் வந்துருக்கானு பாருங்க..” என மகதி அலறிய அலறில் உமா ரஞ்சன் மட்டுமின்றி வீட்டில் உள்ள மற்றவர்களும் அங்கே வந்துவிட்டிருந்தனர்.

மகதியின் உற்சாகத்திற்கு காரணம் பிரபாவுக்கு மட்டுமல்ல.. மகதிக்குமே புரியவில்லை அப்போது.

மகதி ஜூஸ் எடுத்துவந்து பிரபாவுக்கு கொடுக்க.. பெரியவர்களும் உமா ரஞ்சனும் அங்கே வந்திருந்தனர்.

எல்லோரின் கவனமும் கையில் ஸ்வீட் பாக்சுடன் வந்திருந்த பிரபா மீதிருக்க.. ரஞ்சனின் கவனம் மகதியின் நடவடிக்கையின் மீதும் இருந்தது.

பிரபா தன் தொழில் முன்னேற்றத்துக்காக முயற்சித்துக் கொண்டிருந்த லோன் கிடைத்திருந்தது. அந்த சந்தோஷத்தை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதற்காகவே வந்திருந்தான் பிரபா.

உள்ளங்கவர்ந்த கள்வனவன்..Where stories live. Discover now