💕 06 💕

5.6K 258 36
                                    

பிரபா வழக்கம் போல கடைக்கு சென்றிருக்க.. வீட்டில் இருந்த உமாவிடம் தையலுக்கு தேவையான சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று சொன்னார் சுசீலா.

“அம்மா என்னெல்லாம் வாங்கணும்னு சொல்லுங்க.. நான் வாங்கிட்டு அப்டியே மஞ்சுவையும் பார்த்துட்டு வந்துடுறேன்..” என்றாள் உமா.

“அங்கெல்லாம் வேண்டாம் மா.. இங்கே வாங்கிக்கலாம்..” என மறுத்தார் சுசீலா.

“மதி கூட வர்றேன்னு சொன்னா மா.. நானும் அவளும் சேர்ந்து போய்ட்டு வந்துடுறோம்..” என அம்மாவிடம் சம்மதம் வாங்க முயற்சித்தாள் உமா.

“நீ மட்டும் வேணா போய்ட்டு வா மா.. மதியையும் கூப்பிட்டன்னா அத்தை எதுவும் சொல்லப்போறாங்க..” என்றார் சுசீலா.

அதுவும் சரிதான்.. சும்மாவே அத்தைக்கு குறை கண்டுபிடிக்கவே தெரியாது.. என மனதுக்குள் சலிப்புற்ற உமா.. “சரி ம்மா.. நான் போய்ட்டு அப்டியே மஞ்சுவையும் பார்த்துட்டு வந்துடுறேன்..” என்றவாறு கிளம்பினாள்.

மஞ்சுவும் மதியும் உமாவின் பள்ளித்தோழிகள். மஞ்சுவுக்கு திருமணம் ஆகி இப்போது ஒரு குட்டி பாப்பாவும் இருக்கிறாள். அவள் கணவர் ஒரு பேன்ஸி ஸ்டோர் நடத்தி வருகிறார். மஞ்சுவும் கடையில் இருப்பாள் என்பதால் அப்படியே அவளையும் பார்த்துவிட்டு வரலாம் என எண்ணினாள் உமா.

மதி உமாவின் மாமா மகள். மதியும் மாமாவும் உமா குடும்பத்தினருடன் பாசமாக தான் பழகுவர். அத்தைக்கு மட்டும் இவர்களிடம் குற்றம் கண்டுபிடிப்பதே வழக்கம். அவர்களின் உதவியும் எதிர்பார்க்கும் நிலையில் இருந்ததால் சுசீலா அதை பொறுத்துக் கொள்வார்.

விவரம் தெரிய தொடங்கிய வயதில் உமாவும் அத்தையின் குணம் அது.. என்பதை புரிந்து கொண்டாள். மாமாவும் மதியும் தங்களை பாரமாக கருதுவதில்லை என்பதால் அவர்கள் மீது எப்போதும் பாசம் உண்டு.

அம்மா வாங்க சொல்லயிருந்த பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்ட உமா.. மஞ்சுவின் கடைக்கு சென்றாள். அங்கே மஞ்சுவின் கணவர் இல்லை.. மஞ்சுவின் குட்டி பாப்பா உறங்கிக் கொண்டிருந்தாள்.

உள்ளங்கவர்ந்த கள்வனவன்..Where stories live. Discover now