3.என் சுவாசத்தின் மறுஜென்மம்

2.3K 90 17
                                    

அந்த பள்ளியில் விஹானா முதலில் யாருடனும் பழக முயற்சிக்கவே இல்லை.விஹானாவின் தந்தைக்கு அவளின் எண்ணவோட்டம் பிடிபடவில்லை.அப்படியே நாட்கள் செல்ல செல்ல அஞ்சலி என்ற மாணவி விஹானாவிடம் நட்பு பாராட்டினாள்.விஹானாவோ அவளிடம் முதலில் பேசவே தயங்கினாள். பின்னர் நாட்கள் செல்ல செல்ல அவளும் அவளுடன் சகஜமாக பழக ஆரம்பித்தாள்.அவளுடன் பழகியது போல மற்ற மாணவிகளிடம் இவளால் நெருங்கி பழக முடியவில்லை. ஆனால் அவர்களாக எதாவது கேட்டால் அதற்கு ஒற்றை வரியில் பதில் கூற ஆரம்பித்தாள்.

பின்னர் ஒரு நாள் விஹானாவின் வீட்டிற்கு அஞ்சலி விஹானாவுடன் சென்றாள். அங்கோ அவளின் தந்தைக்கு அவள் அந்த புதிய அறிமுக படுத்தியதோடு, அவளுடன் அவ்வளவு இயல்பாக பேசுகிறாளே என்று அவருக்கு அவ்வளவு ஆச்சரியம்.

விஹானாவிடம் அஞ்சலிக்கு ஸ்னாக்ஸ் எடுத்து வர கூறி அவளை சமையலறைக்கு அனுப்பிவிட்டு அஞ்சலியிடம், "அவள் யாருடனும் பேசவே மாட்டாள்.உன்னுடன் எப்படிம்மா அவவ்ளவு நெருங்கி பழகுகிறாள்" என்று கேட்டார்.

அங்கிள் முதலில் அவள் யாருடனும் பழகாதது எனக்கு வித்தியாசமாக இருந்தது. பின்னர் அவளின் தயக்கம் கூச்சம் பயம் போன்றவைகளினால் அவள் இப்படி இருக்கிறாள் என்று தெரிந்தது.அவளிடம் பழகிய பின்புதான் ஒரு விஷயம் தெரிந்தது. அவளிடம் ஒரு குணம், யாரேனும் அதட்டிமிரட்டி அல்லது கெஞ்சியோ ஏதாவது கூறினால் அதை அப்படியே கேட்கிறாள். சாதாரணமாக கூறினால் அதை அவள் முடிந்தால் மட்டுமே செய்கிறாள்.
அதனால் அவளிடம் அவள் பாணியில் பேசிப்பேசி கொஞ்சம் மாற்றினேன் என்றாள்.

விஹானாவின் தந்தையும் அவர்களிருவரும் ஒரே வயதினர் என்பதால் புரிந்துகொண்டதாக நினைத்து விஹானாவிற்கு சகோதரன் சகோதரி யாரேனும் இருந்திருந்தால் அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நினைத்தார். ஏனெனில் அவர் விஹானா பிறந்ததிலிருந்தே அவளை அதட்டியதே இல்லை. முதல்முதலாக அவர் பிடிவாதம் பிடித்தது விஹானாவின் பள்ளி மாற்றத்திற்கே. விஹானாவும் அதனால் தான் ஒத்துக்கொண்டாள் என்பது இப்போதுதான் புரிந்தது.

என் சுவாசத்தின் மறுஜென்மம் Wo Geschichten leben. Entdecke jetzt