மருத்துவமனையில் கண்விழித்த விஹானாவோ தன் அருகில் தீக்ஷித்தை பார்த்து கத்த துவங்கினாள்.
அவளது பெற்றோர் எவ்வளவோ முயற்சி செய்தனர் அவளை சமாதான படுத்த, ஆனால் அவளோ முரண்டு பிடித்தாள். இப்பொழுது அவள் உடல்நிலை சரியில்லாததால் அவள் பெற்றோர் அவளிடம் பின்னர் உண்மையை கூறிக்கொள்ளலாம் என்று உண்மையை மறைத்தனர்.
ஆனால் தீக்ஷிதோ விஹானாவை பார்த்து , நான் ஒரு ஐந்து நிமிடம் உன்னிடம் பேசவேண்டும் சற்று அமைதியாய் இரு!!! என்று கூறினான்.
ஆனால் அவள் அதனைக் பெட்டிலிருந்து எழமுயன்றாள். அவள் எழமுடியாதவாறு தீக்ஷித், அவளை அழுத்தி பிடிக்க முயன்றான்.உடனே அவன் கைப்பிடியிலிருந்து வெளியேற, விஹானா திமிர தொடங்கினாள்.
அவன் எவ்வளவோ முயன்றும் அவனால் அவளை அடக்கிப்பிடிக்க முடியவில்லை. அவளை அமைதி படுத்த சுற்றும்முற்றும் பார்த்தவன் அவள் அருகில் இருந்த டேபிளில் பழம் நறுக்கும் கத்தியைக் கண்டான்.
உடனே கத்தியை கையிலெடுத்தவன், அந்த அறையின் கதவருகே நின்றிருந்த விஹானாவின் தந்தையின் அருகில் சென்று அவருடைய கழுத்தில் கத்தியை வைத்தான்.
விஹானா, இப்பொழுது மட்டும் நீ அமைதியாக நான் சொல்வதை கேட்காவிட்டால் உன் தந்தையின் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று மிரட்டினான்.
அதனை பார்த்த விஹானாவின் தாய், தம்பி எதுவானாலும் பொறுமையாக பேசிக்கொள்ளலாம். தவறுதலாக ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது? தயவு செய்து அவர் கழுத்திலிருந்து கத்தியை எடு! என்று கூறினார்.
தீக்ஷிதோ, இப்பொழுது நான் சொல்வதை அவள் பொறுமையாக கேட்கவேண்டும் இல்லையேல் உண்மையிலேயே இவரின் கழுத்தை அறுத்துவிடுவேன் என்று பொய்யாக கூறினான்.
விஹானாவோ உன்னிடம் பேசுவதற்கு எதுவுமில்லை, நீ இங்கிருந்து கிளம்பிவிடு, உன் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை என்று கூறினாள்.
YOU ARE READING
என் சுவாசத்தின் மறுஜென்மம்
Romanceஇறந்த தன்னுடைய காதலி மறு ஜென்மம் எடுத்து வந்ததாய் நினைத்த இவன் தன் காதலை தக்கவைத்து கொள்வானா? .இங்கு தன்னை ஒருவன் அவனுடைய மறுஜென்மமாய் கருதி அவளை அடைய என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருக்கிறான் என்று அவள் அறிவாளா?????? அப்படியே அவளுக்கு அவனை பற்றி த...