சுவாசம்3

2.8K 157 190
                                    

ஞாயிறு தன்னை மலைமுகடுகளில்
மறைத்துக் கொண்டு தன்
செந்நிற கதிர்களை தூதுவிட வெண்மேகங்களுக்கு அக்கதிர்களின் மேல் காதல் கொண்ட   கருமேகங்கள் பாதி வானிலே  கவ்விக்கொண்டது

அழகிய அந்தி வேளையில் தன் வாகனத்தை நிறுத்தியவன்  "இரு மச்சி ஒரு மணி நேரத்தில வந்தறேன்.."  எனக் கூறிவிட்டு ராமின் பதிலை கூட கேட்காமல் பறந்து விட்டான்..

"என்ன டா இது ஜஸ்ட் கேட்ட் இன்ஸ்டுடின்  (cadd instution) தான் ஆனா இவ்வளவு பேர் இருக்காங்க" என நினைத்தப்படியே  உள்ளே சென்றவன் ரீஷப்ஷனீஸ்ட் இருக்க அவரின் அருகில் சென்றவன்..

"ஹாய் மேம் ...'

"சார் சொல்லுங்க ...."

தன்னிடமிருந்த ராமின் விசிட்டிங் கார்ட்டை கொடுக்க.! அதை வாங்கி பார்த்தவள் "சரிங்க சார் நீங்க வெய்ட் பண்ணுங்க!! மேமை வர சொல்ற"என கூறிவிட்டு துகியின் அறைக்குள் நுழைந்தாள்..!!!

"துகி மேம் உங்களை பாக்கனும்னு  வந்து இருக்காங்க' எனக் கூறி விசிட்டிங் கார்ட்டை நீட்டினாள்...

"அண்ணா சொன்ன ஆள் போல என மனதில் நினைத்தவள்  "ஓகே ஹேமா வெய்ட் பண்ண சொல்லுங்க"

"ஓகே மேம்" என கூறிவிட்டு நகர்ந்தாள்

"பைவ் மீனிட்ஸ் வெய்ட் பண்ணுங்க சார்" என ஹேமா கூற....

"யா சூர்... நான் வெய்ட் பண்ற" எனக்  கூறியவன் சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்க.. அந்த பார்வையை நகரவிடாமல் தடுத்தது அந்த பாதச்சிலை...

அழகியப் பாதம் அதை தொட்டும் தொடாமல் உரசி வரும் அச்சேரீயின் மடிப்பு..!! ஓர் சிலையின் நளினங்களில்
இருந்தது அந்த பெண்சிலையின் முழு உருவம்.. நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றது..!! அதற்கு பிறகு அவனின் வர்ணிப்பு இருந்த இடம் தெரியாமல் போயிற்று ....!!

ஒரு நிமிடம் அவனை கண்டு அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல்

"நீங்க தான் மிஸ்டர் ராம் அனுப்பன ஆளா..."

"ஆம்" என தலையை ஆட்டிட.

  புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))Where stories live. Discover now