அவர்களிடம் ஒரு வித திமிர் கலந்த
ஆணவத்துடன் அனைத்து உண்மைகளையும் கூறிக்கொண்டு
இருந்தவனை அனல் கக்கும் பார்வைப் பார்த்தனர்..அவன் முழுவதும் கூறி முடிக்கும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும் என நினைத்து இருவரும் வெவ்வேறு திசையைப் பார்த்துக் கொண்டு இருக்க..!!! தீடிரெனப் பளார் பளார் என அவனை அடிக்கும் சத்தம் கேட்டு இருவரும் திரும்ப அங்கு ருத்ரமூர்த்தியாய் நிவின் நின்றுகொண்டு இருந்தான்
அவன் கோபப்பட்டுப் பார்க்காத நண்பர்கள் இருவரும் அவனைத் தடுக்காது அதிர்ச்சியில் பார்த்தனர்
வெறி தீர அவனை அடித்தவன்
ராம்,யாதவிடம் திரும்பி "டேய் என்ன டா அப்படி பார்த்துட்டு இருக்கிங்க, ஒரே ஒரு ஆளா இருந்துட்டு என்னென்ன வேலைப் பார்த்து இருக்கான் பாருங்க டா.. பொண்ணுங்களை பேப்பர் யூஸ் பண்ற மாதிரி யூஸ் பண்ணதும் இல்லாம இதை வேற பெருமையா சொல்றான்.! இதெல்லாம் கூட நான் பல்லைக் கடிச்சுட்டுக் கேட்டுட்டு இருந்தேன்..ஆனா நம்ம நவிரா என்ன டா பண்ணா... எந்த தப்பும் பண்ணாம அவளுக்கு எதுக்கு டா இவ்ளோ பெரிய தண்டனை.. எவ்ளோ ஆசையா அவளோடக் கனவை நோக்கி போயிட்டு இருந்தா ச்சே இவனை..." என கோபத்தில் கத்தியவன் மீண்டும் மீண்டும் அடிக்க... நிவின் அடித்த அடியில் சுப்பு தரையில் மடிந்தான்..
"இல்லை டா எங்களுக்கு இவன் மேல
முதலில் எந்த வித சந்தேகமும் வரலை.
ஆனால் இவன் வாயாலயே ஒரு சில
விஷ்யம் சொன்னதும் தான் எங்களுக்கு இவன் மேல சின்ன சந்தேகம் வந்துருச்சு... அதான் துருவித்துருவி கேட்டோம்.. இப்போ உண்மையை சொல்லிட்டான்..." என இருவரும் கூற"இவனை நீங்க என்ன பண்ணாலும் லீகலா எந்த பிரச்சனையும் வராம நான் பாத்துக்கிறேன்.ராம் சொன்னத்துக்காக தான் இங்கே வந்தேன். கொஞ்சம் பெரிய விஷயம் பண்ணி இருப்பான் உள்ளைப் போட்டுட்டு நம்ம வேலையை
பார்க்கனும்னு நினைச்சேன்.! ஆனால் இவன் பண்ண இந்த கேடுக்கெட்ட தனத்துக்கு..நீங்க என்ன வேணா
பண்ணிகோங்க டா.. நான் நம்பிக்கையான போலீசை இங்க வர சொல்றன்..' எனக் கூறியவன் அங்கிருந்து நகர்ந்தான்..
YOU ARE READING
புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))
Romanceபுயலாக இருந்தவளை அவனின் சுவாசமாய் மாற்றினான்..இனி அவனின் காதலால் புயலாக மாறுவாளோ, இல்லை சுவாசமாய் மாறி உயிரில் கலப்பளோ???? சமுகத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வில் புயலாக வந்து அவளின் சுவாசமாய் மாறினான் ... சுவாசமாய் மாறியவர்களின் கதை .... என்...