சுவாசம் 26

1.1K 108 226
                                    

உபயகுசல சிரஜீவன

பிரசுதபாித மஞ்சுளதர

ஸ்ரீங்காரே சஞ்சாரே...

அதர ருச்சித மதுாிதபக

சுதனகனக பிரசமநிரத

பாந்தாவ்யே மாங்கல்யே...

மமதம சதி சமதசசக

முகமனசுக சுபநலஇவ

சுசுத சகித காமம் விரகரகித பாமம்

ஆனந்த போகம் ஆஜீவ காலம்

பாசானு பந்தம் காலானு காலம்

தெய்வானுகுலம் காம்யாச்ச

சித்திம் காமயே....!!    எனும் மந்திரங்கள் முழங்க தன் அருகில் தங்க சிலையாய் அமர்ந்து இருந்த தன்னவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தன்னில் பாதியாக்கிக்கொண்டான்..!!!

(ராம் சொன்னதை போலவே தன் நெருங்கிய சொந்தங்களை மட்டுமே
அழைத்து இருந்தான்..நாவிதாவிற்கு
செம் எக்ஸாம் இருந்தத்தின் காரணமாக அவள் திருமணத்திற்கு
வர முடியாத சூழ்நிலை..
துகிராவை அழைத்தாள் மறுபடியும்
வேதாளம் முருங்கைமரம் ஏறிவிடும்
எனும் ஒரே காரணத்துக்காக  அவளை
அழைக்க வேண்டாம் என யாதவ் கூறி
விட்டான்..அதனால் துகிராவின்  பெற்றோர்கள் மட்டும் கல்யாணத்தில்
கலந்துகொண்டனர்..

பெரியவர்களிடம் ஆசிரவாதம் வாங்க சொல்ல மணமேடையில் இருந்து எழுந்தவர்கள், வேணியிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு நேராக யாதவின் அருகில் சென்றவள்  அவன் எதிர்ப்பாராத நேரத்தில்  காலில் விழுந்தாள்

"அண்ணா ஆசிர்வாதம் பண்ணுங்க.."
எனக்கூற

தீடீரென தன் காலில் அனிதா விழுந்ததால்  யாதவோ  முழித்துக்கொண்டு நின்றான்..

"டேய் தம்பி அனிதாவுக்கு ஆசிர்வாதம் பண்ணு அவ இன்னும் குனிஞ்சிட்டே இருக்க பாரு.!" என வேணி கூற..

"ஐயோ பாப்பா எழு நல்ல இரு மா..
இப்படி பொசுக்குன்னு கால்ல விழுந்து
என்னை கிழவன் ரேன்சுக்கு நினைக்க வைச்சுட்ட..."  என யாதவ் புலம்ப..

  புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))Where stories live. Discover now