சுவாசம் 29

1.1K 105 101
                                    

தன் முன் கதறி அழும் தன் மாமா ஆறுதல் படுத்த அவரை தோளோடு அணைத்தவன் "மாமா என்ன மாமா ஆச்சு.. எதுவா இருந்தாலும் எங்கிட்ட
சொல்லுங்க..." என யாதவ் கேட்க.!!!

"நான் ஒரு நல்ல அப்பானே இல்லை மாப்பிள்ள.!! என் பொண்ணு வாழக்கை நாசமா போனாத என்னால பாக்க மட்டும் தான் முடிஞ்சுது மாப்பிள்ள.. என் பொண்ணைக் காப்பாத்த முடியல மாப்பிள்ள.!! எப்பவும் ஒரு பெண்ணுக்கு அவ அப்பா தான் முதல் ஹீரோ ஆனா என்னால என் பொண்ணு வாழ்க்கையைக் காப்பாத்த முடியாத கோழை ஆயிட்ட மாப்பிள்ள.!!!" என  தலையில் அடித்துக்கொண்டே அழ ஆரம்பித்தார்..!!!

யாதவிற்கு தலை சுத்தாதக் குறை தான்.!! "மாமா !!! என்ன சொல்லுறீங்க.!! என்ன மாமா ஆச்சு.. முதலில் அழுகையை நிறுத்திட்டு என்ன நடந்துச்சுனு தெளிவா சொல்லுங்க.." என்றான் பதட்டப்பட்ட குரலில்

"சரியா ஒரு முணு மாசம் இருக்கும் மாப்பிள்ள, நவிரா எப்போதும் நாலு மணிக்கு வீட்டுக்கு வந்துடுவா ஆனா ஆறு மணியாகியும் வரல" என மோகன் ஆரம்பிக்கவும் யாதவிற்கு தூக்கிவாரிப் போட்டது.!

Kutty flashback:-

"பார்வதி நவிரா, துகிரா வந்துட்டங்களா..." என கேட்க..

"பெரியவ வந்துடா ...சின்னவ இன்னும் வரலங்க பிரின்ட்ஸ் வீட்டுக்கு போய் இருப்பா.." என பார்வதி சொல்ல சற்று அமைதியாக இருந்தார் ஆனால் நேரம் கடக்ககடக்க இவருக்குள்ளும் பயம் வந்து மறைந்தது...

நவி எங்கே  என துகிரா கேட்க..துகிராவிற்கும்  அவளை பற்றி தெரியவில்லை என பயம் தொற்றிக்கொள்ள.. துகிராவிடம் அவள் தோழி வீட்டிற்கு சென்றுள்ளாள் என பொய் கூறினார்கள்..!! அவர்களும் அதையே நம்பினார்கள்..!!

தீடிரென மோகனிற்கு அழைப்பு வர ஏதாவது  க்லைன்ட்ஸ் என நினைத்து முதலில் காலை அட்டன் செய்யவில்லை..!! பின் அவரின் வாட்ஸ்சப்பிற்கு அதே நம்பரில் இருந்து ஒரு வீடியோ வர அதே ஓபன் செய்தவர்

தன் மகள் இருக்கும் நிலையைப் பார்த்துக் கதறி அழ ஆரம்பித்தார்.!!!

  புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))Where stories live. Discover now