சுவாசம் 38

1.3K 114 166
                                    

"என்ன பட்டபகலில இவ்வளவு இருட்டா இருக்கு நம்ம ரூம்..." என முனகியபடியே அறையில் ஒளியை படற விட்டு அனிதா எங்கே என கண்களால் தேட அவளோ மூலையில் மடங்கிக் கிடந்தாள். பதறியடித்து அவளின் அருகில் சென்றவன்

"அனி மா என்ன டா ஆச்சு!.. ஏன் இங்க இருக்க!! முதலில  எழு.."என அவள் எழுந்தமற உதவியவனை கையை தட்டியவள் அவனைவிட்டு தள்ளி  அமர்ந்தாள். அவளின் ஒதுக்கம் வலியை தர.. "ஒரு நிமிசம் என்னை பாரு டி !!இப்போ எதுக்கு இங்க இப்படி உக்காந்துட்டு இருக்க வா வந்து பெட் ல உக்காரு.." என அழைத்தவனிடம் குனிந்துக் கொண்டே

மாட்டேன் என்பதை போல் தலையை மட்டும் ஆட்ட
"ஏய் இப்போ நீ என்னை பார்க்கலன்னா  சத்தியமா சொல்ற என்ன பண்ணுவனு எனக்கே தெரியாது டி...! முதல்ல என்ன பாரு டி முட்டைக்கோஸ்.." என ராம் அவளை மிரட்ட அவனின் மிரட்டலை தூசி போல் தட்டியவளிற்கு அவனின் முட்டைக்கோஸ் என்ற அழைப்பில் கோபம் துளிர்விட

"நான் ஒன்னும் முட்டைக்கோஸ் இல்லை போ டா... நீ தான் மலபார்குரங்கு..." பட்டென்று ஒருமையில் சொல்ல

"என்னது டா வா...."

"நான் மட்டும் என்ன..?? டி னா சொன்ன..?? என கண்களை உருட்டி கேட்டவளிடம்

"வாய் ரொம்பக் கூடி போச்சு டி உனக்கு"

"அதெல்லாம் ஒன்னும் கூடி போகல ஒன்னு தான் இருக்கு..." என அவள் தன் துக்கத்தை மறந்து அவனிடம் வாயடிக்க..

"அப்படியா பார்த்தா அப்படி  தெரியலையே.." என குறும்பு சிரிப்பு சிரிக்க.. அவனின் சிரிப்பை கவனிக்காதவள் "இதோ பாரு..' என நிமிர்ந்து அவனைப் பார்க்க

அடுத்த நிமிடமே  அவள் இரு கன்னங்களையும் இறுகப் பற்றி அவளை அசையவிடாமல் செய்தவன் தன் இதழை கொண்டு அவள் இதழை மென்மையாக முற்றுகையிட தொடங்கினான்.!!!!

அவனை விட்டு எழுந்து செல்ல நினைத்த கால்களை ஒற்றை பெருவிரலால் அடக்கியவளின் கண்களில் கண்ணீர் பெருக ஆரம்பித்தது இருந்தாலும் தன்னவனை விட்டு விலகாமல் அவன் இதழ் சிறையில் அடைப்பட்டு கிடந்தாள்!! முதல் காதல் முத்தம் சில நிமிடங்களுக்கு தொடர அவளைவிட்டு
பிரிந்த அடுத்த நொடி அவன் மார்பில் புதைந்து அழ ஆரம்பித்தாள் அனிதா.!

  புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))Where stories live. Discover now