தன் போனின் திரையில் இருந்த நம்பரை ப்பார்த்தவன்..
தன் கண்களை அழுத்தித் துடைத்து 'சொல்லுங்க மாமா..""மாப்பிள்ளை கொஞ்சம் பேசணும்..
நீங்க பிரீயா இருக்கிங்களா.." என கேட்டவரின் குரலில் தடுமாற்றம் இருந்தது.."சொல்லுங்க மாமா..."
"இல்லை மாப்பிள்ளை நேரிலப் பார்த்து பேசணும்.."
"சரிங்க மாமா வரேன்..ஈவினிங் அங்க இருப்பேன்.."எனக்கூறி போனை வைத்தான்..
"என்ன ஆச்சுப்பா.."என வைதேகி கேட்க..
"இல்லைமா மாமா அங்க வர சொல்றாங்க.. இப்போ கிளம்பிப் போன சரியாக இருக்கும்.." என யாதவ் கூற..
"இந்த நிலைமைல நீ அங்கே போன சரியா இருக்காது பா.." என வைதேகி கூற
"அம்மா நீங்க பயப்பட வேணாம். எனக்கு அப்பப்போ தான் தலைவலி வரும், அப்படி அங்க தலைவலி வந்தாலும் ராம் இருக்கான் என்னை பாதுப்பான்..." எனக் கூறி அங்கிருந்து சென்னை புறப்பட்டான்...
***********
சென்னை விமான நிலையத்தில் இறங்கிய உடனே யாதவிற்கு போன் கால் வர அதை எடுத்து பார்க்க..நவிரா அழைத்து இருந்தாள்.
"சொல்லு நவி மா எப்படி இருக்க.."
"மாமா நீங்க எங்க இருக்கிங்க."என பதில் கேள்விக் கேட்டாள்.
"நான் இங்க சென்னைல தான் இருக்கேன் நவி.."
"சரிங்க மாமா ..அண்ணா ஹாஸ்பிட்டால் வாங்க.."எனக் கூற
"நான் இங்க வரது எப்படி தெரியும்.." என யாதவ் கேட்க..
"அப்பா கிட்ட பேசிட்டு இருந்ததை கேட்டேன்.." என கூறிப் போனைக் கட் வைத்தாள்
பதினைந்து நிமிடத்தில் ராமின் கேபினில் இருந்தான் யாதவ்.!! அங்கு சென்ற உடனே "நவி மா என்ன டா ஆச்சு.." என கேட்க.!!
"நானு இவ வந்ததுல இருந்து கேட்டுகிட்டே இருக்கேன்..ஒரு பதிலும் இல்லை...நீயாவது கேளு டா..' என ராம் சொல்ல..
YOU ARE READING
புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))
Romanceபுயலாக இருந்தவளை அவனின் சுவாசமாய் மாற்றினான்..இனி அவனின் காதலால் புயலாக மாறுவாளோ, இல்லை சுவாசமாய் மாறி உயிரில் கலப்பளோ???? சமுகத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வில் புயலாக வந்து அவளின் சுவாசமாய் மாறினான் ... சுவாசமாய் மாறியவர்களின் கதை .... என்...