சுவாசம் 31

1.3K 127 180
                                    

"கையை எடு டா"..என முனக..

"என்ன டி சொல்ற தெளிவா. சொல்லு.." என யாதவ் கேட்டவன் தன் கண்களை அழுத்தித் துடைத்தான்.!!

"இடுப்புல இருந்து கையை எடு டா எருமை" இம்முறை அவளின் வார்த்தை தெளிவாக இருந்தது..

"ரொம்ப முக்கியம் இந்த நிலமையில கூட என்ன யோசிக்கறா பாரு.." என யாதவ் முணங்கிக்கொண்டே அவளை மடியிலிருந்து இறக்கியவன்.!! அவளைத் தூக்கிக் கொள்ள அவனின் கை விரல் அவளின் இடையை அழுந்த பற்றி இருந்தது.!! அவனை விழி விரித்து பார்த்தவள் "ரொம்ப முழிகாத டி நீ மயக்கமா இருக்கன்னு தான் தூக்கிட்டு போற..".!! என யாதவ் கூற அவனை இமைக்கமால் பார்த்து கொண்டிருந்தாள்.!!

படுக்கையில் அமர செய்தவன் அவளிற்கு முதல் உதவி செய்து, வலி தெரியாமல் இருக்க
இன்ஜெக்ஷன் போட்டு விட்டவன்! "கை ஆழமா கிழிச்சு இருந்தா என்ன டி பண்றது..லூசா டி நீ..."என யாதவ் அக்கறையுடன் கேட்க..

அவனை விழி அகலமல்  பார்த்தவலிம் கண்களில் கண்ணீர் சுரந்தது...மேலும் அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல்
அதை அவளுள் மறைத்தாள்..

"எதுக்கு டி கையை அறுத்துக்கிட்ட" என யாதவ் கேட்க..

"உள்ளங்கைல கத்தி இருக்கறது மறந்து தெரியாம அழுத்தி பிடிச்சு ரத்தம் வந்துருச்சு.." என துகி உள்ளே சென்ற குரலில்  கூற.!!

"சரி சரி ரெஸ்ட் எடு, நான் ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வந்தறன்" என்றவன்  கிளம்பி விட

இதுவரை அடக்கி வைத்திருந்த அனைத்து துக்கமும் கண்ணீராக மாறி
கொட்ட ஆரம்பித்தது..

தன்னவன் மேல் சந்தேகபட்டு இத்தனை நாள் இருந்து விட்டேனே என நினைத்தவள்  கையில் கத்தி இருந்ததை  மறந்து அழுத்திப் பிடிக்க அது காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது..ரத்தம் வழிந்ததை கவனிக்கும் நிலையில் துகிரா இல்லையே.. அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் இவளை நொடி நொடியாக வதம் அல்லவா செய்தது..

"ஏன் டா இப்படி பண்ண.. என் மேல உனக்கு அவ்ளோ லவ்வா.!! நீ லவ் பண்ணளவுக்கு  நான் லவ் பண்ணலேயே டா! நீ உயிருக்கு போராட்டிட்டு இருக்கும் போது கூட உன்கூட இல்லாம பண்ணிட்டியே டா!
நான் உன்னை எப்படி டா வெறுப்பேன். எப்படி டா வேற ஒரு கல்யாணம் பண்ணிக்குவன்னு நினைச்ச...!!

  புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))Where stories live. Discover now