சுவாசம் 13

1.4K 119 116
                                    

இரவு ஆடி அசைந்து வந்தவன்  வீட்டிற்குள் செல்ல.."இன்னைக்கு என்ன வீடு இவ்வளவு அமைதியா இருக்கு..!! ஏதோ சரியில்லையே" என நினைத்தவன்  மெல்ல மெல்ல நடந்து செல்ல

'யாருமே இல்லையே.. எங்க போயிருப்பாங்க" என முணுமுணுத்துக் கொண்டே வெளியில் கார் இருக்கிறதா!! என பார்க்க அது இல்லாமல் போக  "அப்போ மாமாவும்,அத்தையும் ஏதோ பிளான் பண்ணிட்டாங்க போலயே குழந்தைகளும் போயி இருப்பாங்களோ" என  முணுமுணுத்துக்கொண்டே தன் அறைக்கதவை திறந்த அடுத்த நொடி ஏதோ பறந்து வந்து அவன் மேல் விழுந்தது, அடுத்து அவன் சுதாரித்து கொள்வதற்குள் மீண்டும் ஏதோ பறந்து அவன் மேல் விழ.. "ஐயோ என்ன டா இது" என நினைத்தவுடன்  அடுத்து பறந்து வந்ததை சரியாக கேட்ச் பிடித்தான்..

இப்போது அவன் கேட்ச் பிடித்தது கண்ணாடி டம்ளர் "ஜஸ்ட் மிஸ் இல்லைனா இன்னைக்கு   மண்டகாலியாகிருக்கும் என நினைத்தவன் அடுத்தடுத்து வந்த டம்ளர். பூ ஜாடி.. குப்பை தொட்டி ..புக்ஸ் என அனைத்தையும் கேட்ச் பிடித்துக்கொண்டே பேச ஆரம்பித்தான் 'ஏய்ய்ய் இப்போ என்னாச்சு  எதுக்கு என்மேல உனக்கு இவ்வளவு கொலைவெறி... கொஞ்சம் நிறுத்து டி ..ஆடு ஆடு... ப்ளீஸ் டி அதை எடுக்காத ஏய்ய்ய் நான் கேட்ச் பிடிருச்சுவன் ஆனால் உன்னால அதை தூக்க முடியாது செல்லம்... சொன்னாக் கேளு" என கூறிக்கொண்டே அவள் அருகில் செல்ல

"டேய்ய்ய் அங்கேயே நில்லு இல்லனா இதை ஒடச்சுறுவேன்.." என்று கூறிக்கொண்டே  டேபிள் லேம்பை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டே துகிரா சொல்ல

"சரி டி நான் உன் பக்கம் வரக்கூட மாட்டேன்..அந்த லேம்பை டேபிள்ல மட்டும் வைச்சிடு உன் கை தான் வலிக்கும் வை டி" எனக்கூற

"டேய்ய்ய் பொறுக்கி.. என் கை வலிச்சா என்ன வலிக்கலனா உனக்கு என்ன டா

சில நிமிட அமைதிக்கு பின் துகியே பேச ஆரம்பித்தாள்

"அது எப்படி செம ஹாட் ஆஹ் ..செம cute ஆஹ் ..அப்பறம் என்னமோ சொன்னியே ,என்னது!! என கன்னத்தில் கை வைத்து யோசிக்க ..அவள் யோசிப்பதற்குள்

  புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))Where stories live. Discover now