சுவாசம் 33

1.2K 122 144
                                    

யாதவ் தன் மொபைலில் தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டடிருந்தான் ..

"டேய் பென்சில் டப்பா என்ன டா பண்ற!! ஏதாவது சொன்னா நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுவேன்ல.!!" என துகி  கேட்க..

"ஒரு நிமிஷம் இரு டி இந்த போட்டோ டவுன்லோட் ஆகட்டும். ம்ம் ஆயிருச்சு சூப்பர். அடியே இங்க வா வா..' என துகியை அழைத்து தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன் "இந்த போட்டோவை பாரு டி.."என துகியிடம் காட்ட

முதலில் அதை சாதாரணமாக கண்டவள் பின்பு நன்றாக உற்று கவனித்து

"டேய் மாமா இது இ..து அன்னைக்கு பஸ் ல"என அவள் தடுமாற..

அவளை இறுக்க அணைத்தவன்..
"என்ன டி வாய் தந்தி அடிக்குது என்ன பாத்து இருக்கியா இவனை.." என யாதவ் கேட்க..

"என்னது பாத்து இருக்கியா வா.இவன் என்கிட்ட அடியே வாங்கி இருக்கான் தெரியுமா.." என கெத்தாக காலரைத் தூக்கி விட்டவள் அவனை பார்க்க

"இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை"
என நினைத்தவன்.."சரி டி என் குழ்கோந்து கொஞ்சம் தேளிவா சொல்லு..." என யாதவ் கேட்க..

அவளோ கண்ணத்தில் கை வைத்து அமர

"அடியே அடியே பிளாஷ்பேக் மட்டும் போயிடாத...அடிச்சே கொன்றுவாங்க அப்படியே என்ன நடந்ததுனு மட்டும் சொல்லு..!" என கேட்டவனிடம்

"உன்னை  முத தடவைப் பார்த்தது ஞாபகம் இருக்கா.. அன்னைக்குகூட அனிதாவை யாரோ தப்பா டச் பண்ணி அது நீன்னு நினைச்சு உன் கையை கிழிச்சு விட்டனே அது உனக்கு ஞாபகம் இருக்கா.." என துகி கேட்க..

"ஏன் இல்லைம நல்ல இருந்த என் லைப்ல ஜென்மசனி புகுந்து விளையாடன நாள்.." என முனகல் போல சொன்னவனிடம்

"என்ன டா ஞாபகம் வந்துச்சா இல்லையா..."என கேட்டவளிடம்

"ஆமா டி அப்போ என்கூட தானே இருந்த.!!என்னை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயி ட்ரெஸ்ஸிங் பண்ணிவிட்டுட்டு காலேஜ்க்கு போனயே!! அப்பறம் மதியமே வெளியே வந்து எவன் கையோ உடைச்சு விட்டயே..!!" என கூறி அவள் பின்னால் சுத்தியதையும் உளறினான்..

  புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))Where stories live. Discover now