சுவாசம் நீ 56-1

1.5K 117 83
                                    

"ஆடு ஏய் ஆடு என்னை கொஞ்சம் பாரு டி..." என தன் அறைக்குள் கத்தி கொண்டே சென்றான் யாதவ்

"இப்போ எதுக்கு இப்படி கத்திட்டு வர கீழ எல்லாம் இருக்காங்க எல்லாம் என்னோட பேர ஓட்டுவாங்க மெல்லமா கத்து டா.. "என்றவளிடம்

"உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் டி.. "துள்ளல் போல

"நானும் ஒன்னும் சொல்லணும் சரி நீயே சொல்லு... அப்படி என்ன முக்கியமான விஷயம் பேசணும் என் புருசனுக்கு.." என்று ஒற்றை புருவத்தூக்களில் கேட்க...

அவளை கட்டிக்கொண்டு "நம்ம இன்னைக்கு ஹனிமூன் போறோம் டி" அவளை மேலும் தன்னுள் இறுக்கி அணைத்து கொண்டே கூற

அவனின் அணைப்பில் இருந்தவாறே "ஹனிமூன் பத்தி நாலு மாசத்துக்கு முன்னாடியே யோசிச்சு இருக்கணும் டா பொறுக்கி... இப்போ நம்ம நினைச்சாலும் போக முடியாது டா மாமா.."என்றவள் மேலும் வெட்கப்பட

அவளிடம் இருந்து பிரிந்தவன் "ஏய் என்ன டி இப்படி சொல்ற" என முகத்தை தூக்கிக் வைத்து கொள்ள..

படுக்கியில் அமர்ந்தவாறே" பின்ன என்ன டா இந்த நாலு மாசமா என்னை ஒழுங்கா தூங்க விட்டயா நீ அதான் இப்போ இப்படி.." என வயிற்றை தடவிக்கொண்டே கூறினாள்( அவளின் செய்கையை அவன் கவனிக்காமல் பின்னால் திருப்பியவாறு இருந்தான்..) அதுவும் இல்லாமல் இப்பொல்லாம் எனக்கு அடிக்கடி தூக்கம் வருது, ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு , நிறைய சாப்பிட தோணுது, ஸ்லேடு பென்சில், புளி, எல்லாம் சாப்பிட தோணுது டா மாமா!!" என கூறியவளின் குரலில் ஏதோ ஒரு மென்மை அது வெட்கமா இல்லை காதலின் வார்த்தைகளா என்னவென்று சொல்ல முடியா உணர்வை கண்டான் யாதவ்..

"சற்று சலிப்பாக 'ஏய் ஆடு என்ன டி இப்படி சொல்ற!! இந்த நாலு மாசத்தில அடிக்கடி தானே நீ தூங்காம இருந்த!! என்னமோ நாலு மாசமா தூங்காத மாதிரி சொல்ற.."அவளின் அருகில் அமர்ந்தவன் கையை பிடித்து "பிளீஸ் டி இந்த ஒன் வீக் மட்டும் தான் நம்ம தூங்க கொஞ்சமா லேட்டா ஆகும்!!! அதுக்கு அப்பறம் நீ இங்க வந்து நல்லா தூங்கு டி உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்.." என அவளிடம் கெஞ்சல் குரலில் கேட்டான்..

  புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))Where stories live. Discover now