சுவாசம் 48

977 116 130
                                    

மணி ஒன்பதை தாண்டியதும் அனிதாவின் பொறுமை காற்றில் பறந்தது உடனே ராமிற்கு அழைப்பை விடுத்தவள் அவன் அழைப்பை ஏற்றதும் பொரிந்து தள்ளினாள்...

"டேய் மாமா எங்க டா இருக்க இன்னும் ஏன் வீட்டுக்கு போகலை.."

"இன்னும் 10 நிமிஷத்துல வந்துடுவன் டி ...."

"என்ன 10 நிமிஷம் ஆகுமா.. நீ போ டா உனக்கு இருக்கு..இன்னைக்கு எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சே ஆகனும். இன்னைக்கு மட்டும் நீ பதில் சொல்லல உனக்கு டைவர்ஸ் தான் டா என கூறியவளிடம்

"ஓ ஓ மேடம் எனக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு அப்பறம் என்ன பண்ணலாம்னு ஐடியா" என சிரிப்புடன் கேட்க

"ஹிம்ம்ம் யாதவ் அண்ணா வீட்டுக்கு போவேன்..."என்றவளிடம்

"ஒ ஒ அப்படியா அப்ப மேடம் முடிவு பன்னிட்டிங்க அப்படிதான... ஹும்ம்ம்ம்ம் ஆமா"என சிரிப்புடன் சொல்ல

"அதை அப்படியே என்னைப் பார்த்து சொல்லு பாக்கலாம்..." என ராம் நுழைய

"மாமா நீ...ங்க"விழி விரித்து பார்த்தவள்

"நான் இங்கே வந்துட்டேன்னு எப்படி தெரியும்.." என கேட்டவளிடம் காலண்டரை கண் காட்டியவன் அமைதியாக நின்றவளின் அருகில் சென்று

"என்ன டி இவ்வளவு நேரமா விடாம பேசிட்டு இருந்த இந்த வாய்!! இப்போ பேச இப்படி யோசிக்குது.."

"அதெல்லாம் ஒன்னும் இல்லயே...இப்ப கூட சொல்லுவேன் டா நான் உனக்கு டைவர்ஷ் தர போறேன்....."

"அத்துமா..... என்னால உன்னை விட்டுட்டு இருக்க முடியாது டி என ராம் கூறவும்! அடேங்கப்பா நம்பிட்டேன் போ டா...இத்தனை நாள் எப்படி இருந்தயாம் உனக்கு என் மேல பாசமே இல்லை.!! உனக்கு மட்டும் இல்லை யாருக்குமே என் மேல பாசமே இல்லை."..என உதட்டை பிதுக்கி  கூற

"ஏய் என்ன டி இப்படி சொல்ற!! உன் மேல எனக்கு அம்புட்டு பாசம் தெரியுமா டி..!!!" என கூறியவளிடம்

"நடிக்காத டா...என் மேல பாசம் இருந்து இருந்தா நா அன்னைக்கு கேட்டத நீ எனக்கு குடுத்து இருப்ப ஆனா நீ என்ன பண்ண எனக்கு பிடிக்காத விஷயத்தை பண்ண வைச்சுட்ட டா..."என கூறீ ராமை முறைக்க

  புயலே சுவாசமாய் (( முடிவுற்றது ))Where stories live. Discover now