பாகம் 2
வீட்டு வாசலில் புதிதாய் ஒர் ஹோண்டா சிவிக் வெள்ளை நிறத்தில் நின்றது.
'ஐக் மாமா எப்போ காரை மாத்தினார்.?
கேள்விக்குறியாய் ஒற்றை புருவத்தை உயர்த்தியவள் கேள்விக்கு பதிலாய் பார்வைக்கு புதிதாய் ஒரு ஆண்மகன் சிக்கினான்.
கோதுமை வண்ணத்தில் கூர் நாசியும்,பெரிய கண்களும், அழகாய் ட்ரிம் செய்யப்பட்ட மீசையும்,சீராய் சீவப்பட்ட தலை முடியும்,பார்க்க ஆண் அழகனாய் இருந்தான்.
இவன் யாரானால் நமக்கென்ன, வந்த வேலையை பார்ப்போம் என அத்தை மாமாவை கண்களால் தேடினாள்.
அவளை அதிகம் அலைய விடாமல் அவளுடைய மோகன் மாமா வந்து விட்டார்.
"அடடே வாடா அஞ்சுக்குட்டி..மாமா இல்லாட்டி இந்த பக்கமே உன் சிங்கக்குட்டி எட்டிப்பார்க்காதோ.?
அவளுடைய சின்ன விவா காரை அப்படி கலாய்ப்பதில் அவருக்கு ஒரு சந்தோசம்.
அஞ்சலிக்கோ இந்த மாமா இப்படி புதிதாய் வந்திருப்பவன் முன் தன் மானத்தை வாங்க வேண்டுமான்னு தோனிற்று.
"போங்க மாமா ..நீங்க இல்லாம உங்க இல்லத்தரசிகிட்ட மாட்டிக்க எனக்கு இன்னும் நட்டு கழன்று போகலையே"
செல்ல குரலில் மாமாவிடம் அத்தை மைதிலியை அஸ்திரமாக்கினாள்.
"உன் கதை ஒலகத்துகே தெரியும் அஞ்சுமா,உனக்கு ஹொலிடே வந்தா தூங்கனும்,அதுக்காக என் அருமை மனைவிய உருட்டாதே கண்ணே, அப்புறம் சாப்பாடுக்கு தாளம் தான் போடணும் ".
மாமா காலை வாரிவிட சமயத்தில் அங்கு வந்த அத்தை அழகு காட்டினாள்.
புதியவன் முன் எதுவும் வேண்டாம்மென அஞ்சலியும் அமைதியாகி விட்டாள்.அதுவரை அங்கு ஒருவன் இருப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தது போல மோகன்,
"அஞ்சுமா மறந்திட்டேன் பாரு,இவர் யுகேந்திரன்,
என்னோட புது பிஸ்னஸ் பார்ட்னர்.போன மீட்டிங் கூட இவரோட டீலர்ஷ்ப் வெசிக்கத்தான்"மோகன் மாமா அந்த நெடியவனை அறிமுகப்படுத்த,
YOU ARE READING
❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed
Romanceவணக்கம் நண்பர்களே. இதுதான் முதல் முதலில் நான் எழுதிய கதை. ஒரு தோழியின் தூண்டுதலின் பெயரில்தான் நான் எழுத தொடங்கியது. இன்னொரு மூங்கில் நிலானு கூட இந்த கதையும் சொல்லலாம். அஞ்சலி - யுகேந்திரன் ராஜ் கல்யாணம் முதல் காதல் வரை தெரிந்த...