பாகம் 5
'வெளடாதே மச்சி ,அம்மா அப்பாவை சமாளிக்க எதாச்சும் ஐடியா குடுப்பா'.நமக்கு இந்த கல்யாணம் கச்சேரிலாம் செட் ஆவாது நைனா" அஞ்சலி சோகமாய் சொல்ல,
'ஹஹஹ என்ன அஞ்சலி என்ன கிண்டல் பண்றியா?."
நானே அப்படி ஒரு சூழ்நிலைல மாட்டிக்கிட்டுத்தான் எப்படி தப்பிகிறதுனு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன்""சரி நம்ம ஐடியா மணி அஞ்சலிராணிக்கிட்ட ஐடியா கேக்க வந்தா,இங்க மொதலுக்கே மோசம் வந்த மாதிரி ல இருக்கு."அவனும் சோகத்தில் கன்னத்தில் கை வைக்க,
"ஏன் மச்சி,உனக்கும் வீட்ல பொண்ணு பார்த்திட்டாங்களா?
அதுல தப்பிக்கதான் தொரை இங்கன ஓடி வந்திங்களா?"இப்பொழுது அஞ்சலி கலாய்க்கும் மோட்க்கு மாற,"உனக்கே தெரியும் நான் ஒரே ஆண்பிள்ளை,என் தங்கச்சி அனுமாலினி கல்யாணத்திற்கு அப்பா ஸ்தானதில் நான் நிக்கணும்,இது என் அப்பாவோட இறுதி ஆசை.அவளுக்கும் என் உயிர் தோழன் உதய்க்கும் மேரேஜ் பிக்ஸ் பண்ணிட்டாங்க."
"என் கல்யாணம் நடந்தாதான் அவங்க கல்யாணம் நடக்கும் என்ற நிலை வந்திருச்சு.இதான் சாக்குன்னு எங்க அம்மா அவங்க அண்ணன் மகள் மதியை கட்டிக்கோனு ஒத்த கால்ல நிக்குறாங்க.
"நான் என்ன பண்ண சொல்லு'.ஒரே மூச்சில் பேசி முடித்தவனை நிதானமாய் பார்த்தாள் அஞ்சலி.
'ஏன் யுகேன் மதியை உனக்கு பிடிக்கலையா?'
'ப்ச்சு,அப்படி இல்ல அஞ்சலி,உறவுகுள்ள திருமணம் வருங்கால சந்ததிய பாதிக்குமே.அப்புறம் அவ கொஞ்சம் ரீத்தா மாதிரி இருப்பாள்.போதாதா என் வாழ்க்கை நாசம் ஆவறதுக்கு'.எரிச்சல் மண்டியது யுகேனின் பேச்சில்.
"ஐய்யோ பிட்டி மை பேபி? ,இதுக்கு என்னதான் வழி இருக்கேனு சொல்லுடா'.எனக்கும் கல்யாணம் காதல் பிடிக்கலையே யுகேன்,இன்னொரு வாழ்க்கையும் ஏத்துக்க மனசும் இல்லையே."
அஞ்சலியின் குரல் கம்மிற்று
'ஹேய் அஞ்சலி ரிலாக்ஸ் .நான் ஒன்னு சொல்றேன்,பிடிச்சிருந்தா மட்டும் ஒகே சொல்லு,பிடிக்காட்டி செருப்ப எல்லாம் கலட்டிராத'.
YOU ARE READING
❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed
Romanceவணக்கம் நண்பர்களே. இதுதான் முதல் முதலில் நான் எழுதிய கதை. ஒரு தோழியின் தூண்டுதலின் பெயரில்தான் நான் எழுத தொடங்கியது. இன்னொரு மூங்கில் நிலானு கூட இந்த கதையும் சொல்லலாம். அஞ்சலி - யுகேந்திரன் ராஜ் கல்யாணம் முதல் காதல் வரை தெரிந்த...