Office -3
நான் தான் உங்கள முன்னடியே பாத்து இருக்கனே.
Flashback
ஜீலை 2017 KC college - காரைக்குடி
முல்லையின் கல்லூரி வாழ்க்கையின் முதல் நாள்.
முருகன், பார்வதியின் ஒரே மகள் முல்லை.
அவர்களுது உலகம் அவள். அவளுக்காக எதுவும் செய்வார்கள். ஆனா முருகன் ரொம்ப கௌரவம் பிடிச்சவர்.
முல்லை:மா,பா முதல் நாள் காலேஜ் போறேன் என்ன ஆசீர்வாதம் பண்ணுக.
பா:நல்லா இருமா. நீ பஸ்ல போக வேணாம் டி. அப்பா கூட போ.
முருகன்: அம்மாடி நீ ஆசைப்பட்ட எல்லாம் நடக்கனும் நல்லா இரும்மா. சரி வா அப்பா உன்ன காலேஜ்ல விட்டுட்டு மில்லுக்கு போறேன்.
முல்லை: சரி பா. அம்மா வரேன் மா.
காலேஜ்...
முல்லை ராகிங் என்ற பயத்தோடே கல்லூரிக்குள் நுழைகிறாள்.
அங்கு மரத்தடியில் மூன்று மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர் புது மாணவிகளை ராகிங் செய்து கொண்டு இருந்தனர்.
இவர்களை பார்த்து பயந்த முல்லை இவர்களிடம் மாட்டி கொள்ளாமல் தப்பிக்க அருகில் இருந்த கல்லூரி பேருந்து பின் ஒழிந்து கொண்டாள்.
ராகிங் நடக்கும் இடத்திற்கு மூன்று மாணவர்கள் வந்தனர்.
Boy 1 : டேய் என்னடா பண்றீங்க
Boy 2 : ராகிங் பண்ண கூடாதுனு தெரியாத
ராங்கி gang: நாங்க அப்படி தான் பண்ணுவோம்.
Boy 1: ஓங்கி அவன் கன்னத்தில் ஒன்று வைக்க
ராகிங் gang: டேய் என்னையே அடிச்சுட்டல
Boy 1: அப்படி தான்டா அடிப்பேன். ராங்கி பண்றது தப்புனு சொன்னா அப்படி தான் பண்ணுவனு சொல்ற
ராங்கி gang: டேய் உன்ன என்ன பண்றேன்பாரு.
Boy 1: போடா போய் உன்னால முடிஞ்சத பண்ணு.
ராங்கி gang: இருடா உங்க கும்பலையே காலி பண்றேன் பாரு
Boy 1: எங்க கும்பல காலி பண்றியா போடா டேய்
![](https://img.wattpad.com/cover/272477923-288-k883557.jpg)