Office -18
முல்லை வீடு....
முல்லை: அம்மா என்னம்மா நடக்குது இங்க. நீங்களா கூட்டிட்டு போனிங்க. அப்புறம் வேணானு கூட்டிடு வரீங்க.
முருகன்: இந்த கல்யாணம் வேணாம்
பார்வதி: ஏங்க....
முருகன்: நா சொல்லிட்டேன்... அவ்வளவு தான்
முல்லை: இங்க என்ன நடக்குது.
பார்வதி: அவங்க உன் அத்த குடும்பம் டி
முல்லை: எனக்கு அத்த இருக்காங்களா
பார்வதி: ஆமா...
முல்லை: அவங்கலாம் ஏன் நம்பல்லட பேசல
பார்வதி: என்னால தான்
முல்லை: உன்னாலையா
பார்வதி: ஆமா...
முருகன்:.....
முல்லை:.......
பார்வதி: எங்க அண்ணன் நிச்சயதார்த்தம் ல தான் உங்க அப்பாவ முதல் முதல பாத்தேன். எங்க அண்ணியோட தம்பி.
பாத்ததும் புடிச்சு போச்சு என்ன காரணம்னு தெரியல.எங்க அண்ணன் கல்யாணத்துக்கு அப்புறம் உங்க அப்பா அடிக்கடி எங்க வீட்டுக்கு வருவாரு.
எங்க இரண்டு பேருக்கும் புடிச்சு போச்சு. நாங்க விரும்ப ஆரம்பிச்சுட்டோம்.
எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.
உங்க அப்பாக்கு வேலை இல்ல. எங்க அண்ணனுக்கு அதனால உங்க அப்பாவுக்கு என்ன கட்டி குடுக்க விருப்பம் இல்ல.
என குடும்பத்த மீற முடியாம அவங்க பாத்த மாப்பிள்ளைய கட்டிக்க சம்மதம் சொல்லிட்டேன்.
ஆனா உங்க அப்பாவ மறக்க முடியல. கல்யாண அன்னைக்கு கடிதம் எழுதி வைச்சுட்டு ஒடி வந்துட்டோம்.
திருச்சிக்கு வந்து எங்க வாழ்க்கைய தொடங்குனோம்.
ஒரு வருடம் கழித்து நா கர்ப்பமா இருந்தேன்.
திருச்சி medical center hospital ku போய் இருந்தோம். அங்க என் அம்மாவையும் அண்ணியையும் பாத்தோம்.