12

704 27 1
                                    

"பார்ப்போம் பார்ப்போம்" என்று கூறியவள் கண்கள் மூடி படுத்திருந்தாலும் தூக்கம் மட்டும் தொலைவில் இருந்தது.

தன் வாழ்வில் எதிர்பார்க்காததெல்லாம்  நடந்துவிட்டதை எண்ணி தூக்கம் வர மறுத்தது.

எவ்வளவு சந்தோஷமாய் தன் அண்ணனுடனும் அம்மா அப்பாவுடனும் தன் வீட்டில் இருந்தோம். ஆனால் ஒரே நாளில் இவ்வாறு தலை கீழாகும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

விட்டதை வெறித்து கொண்டிருக்க மனம் மட்டும் தன் அன்னை தன்னை நம்பாமல் யார் யாரோ பேசியதை உண்மை என்று நம்பி கூறிய வார்த்தைகள் அம்பாய் குத்தியது. அவளையுமறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் கொட்ட தொடங்கியது.

படுத்துவிட்டாலும் அவளை பற்றி நன்கு அறிந்தவன் அவள் எண்ண ஓட்டங்களை சரியாக கணித்து உறங்க மாட்டாள் என்று இருட்டிலும் அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.

"அழகிம்மா" என்றான் மிக மெதுவாய்.

அந்த குரலில் காந்தத்தை உணர்ந்தாளோ என்னவோ கட்டுண்டது போல் சிவாவை பார்க்க, இரு கரம் விரித்து அன்னையாய் அழைக்க எதுவும் யோசிக்காமல் அவன் கரங்களுக்குள் சிறைப்பட்டாள்.

அந்த அணைப்பில் காதல் இல்லை... மோகம் இல்ல... தூய அன்பு மட்டுமே இருந்தது.

எந்த வார்த்தைகளும் பேச தேவையில்லாமல் மௌனமே ஆட்சி புரிய, அவளின் தலையை மட்டும் மெதுவாய் வருடி கொண்டே இருந்தான் ஷிவா.

எவ்வளவு நேரம் கண்ணீர் வழிந்ததோ தெரியாது... இன்று வரை யாரோவாக இருந்த ஒருத்தனின் நெஞ்சத்தில் இந்நொடி தஞ்சம் கொண்டுள்ளோமே அதை பற்றியும் சிந்திக்க தோன்றவில்லை... இதயத்தை பிளக்கும் வலி மட்டும் கொஞ்சம் குறைந்தால் நன்றாயிருக்கும் என்று தோன்ற எதை பற்றியும் யோசிக்கவில்லை ஏதோ ஒரு உருவில் கிடைத்த அன்பின் வருடலில் வெகு நேரம் கழித்து உறங்கி போனாள்.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now