33

553 19 4
                                    

"என்ன செய்யலைன்னு கேளு... நான் அவ்ளோ தூரம் எச்சரிக்கை செய்தும் கேட்காம ரிஸ்க் ல போய் மாட்டிக்கிறா." என்றான் ஷிவா பயமும் கோபமும் கலந்து.

கண்ணன், "என்னடா சொல்ற? இந்த முறை என்ன பண்ணிங்க ரெண்டு பேரும்?" என்றான் கோபமாய்.

"டேய் நானே செம காண்டுல இருக்கேன். ஏதாவது பேசி நல்லா வாங்கி கட்டிக்காத சொல்லிட்டேன். உங்க வீட்டலையும் இதே தான் பண்ணுவாளா?" என்றான்.

"டேய்! என் தங்கச்சி அப்படியெல்லாம் ஒன்னும் செய்ய மாட்டா. உன் காத்துதான் அடிச்சிருக்கு. என்னைக்கு நீ தாலி கட்டினியோ அப்போதுலர்ந்து இப்படி தான் ஏதாவது ஏடாகூடமா பண்ணிட்டு இருக்கா." என்றான் கண்ணன் கடுப்பாக.

"என்னாது?" என்று முறைத்தான் ஷிவா.

"இந்த முறை வரட்டும் என் ரூம்லயே கட்டி வச்சிடறேன்." என்றான் ஆத்திரம் அடங்காமல்.

"என்னது அறிவுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?" என்றான் ஜீவா அதிர்ச்சியாக.

"ஆமா... இவர் தான் அவ புருஷன்." என்றான் கண்ணன்.

"அதுக்கு தான் நீ சொன்னா காப்பாத்த கண்டிப்பா வருவாருன்னு சொன்னாளா? அடிப்பாவி. இதுல எனக்கு எதுவும் ஆகாது... ஆகவும் விடமாட்டார். ஏன்னா அவரோட உயரே நான் தான்னு டையலாக் வேற." என்றான் ஜீவா.

அதை கேட்டதும் சிவாவின் விழிகள் லேசாக கலங்க.

"டேய்! விடுடா. அழகியை பத்திரமா கூட்டிட்டு வரலாம். என்ன பிளான்?" என்றான் கண்ணன்.

"கண்ணா... எனக்கு பயமா இருக்குடா. அவன் உள்ள ரொம்ப கோபமா இருப்பான். ஏன்னா அவனோட எந்த பிஸினஸையும் விடாம ரெண்டே நாளில் தூக்கிருக்கேன். இப்போ அறிவு தான் என் மனைவின்னு தெரிஞ்சுது... அவ்ளோ தான். ஆபத்து தெரியாம இவளே போய் மாட்டிருக்காடா. கடவுளே அவளுக்கு எதுவும் ஆக கூடாது." என்று கண்கள் கலங்கியபடி நண்பனை கட்டி கொண்டான்.

"ஷிவா. உன்னை விட எனக்கு உயிரே இல்லடா. உனக்கு ஆறுதல் சொல்லனுமேன்னு சும்மா தைரியமா இருக்க மாதிரி காட்டிட்டு இருக்கேன். நமக்கு டைம் இல்லடா. சீக்கிரம். ஏதாவது செய்யணும்." என்றான் கண்ணன்.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now