31

505 21 0
                                    

"அது...அது.." என்று அவள் தயங்கவும்.

"உனக்கு தயக்கமா இருந்தா லேடி போலீஸ் கூப்பிடறேன் மா. நீ அவங்ககிட்ட சொல்லு." என்றான் ஷிவா.

பெருமூச்சொன்றை இழுத்து விட்டவன், "இல்லண்ணா உங்ககிட்டையே சொல்றேன். அந்த பொண்ணுங்களை ஒன்னு மிரட்டி பணியை வைப்பாங்க இல்லைன்னா அவங்க ஏழ்மையை பயன்படுத்தி காசை காட்டி அவங்களுக்கு தேவையானதை முடிச்சுப்பாங்க. எங்க ஹாஸ்டல் வார்டன்கும் இதுக்கும் சம்மந்தம் இருக்கு. கூட இருக்க பொண்னுகள்ல சில பேர் அவங்க ஆளுங்க.

இது ரெண்டுத்துக்குமே அடிபணியாத பொண்ணுங்களை போதை பழக்கத்துக்கு அடிமையாக்கிடுவாங்க. போதை பொருள் வேணும்னா என்ன வேணாலும் செய்றேன்ற அளவுக்கு கொண்டு வந்துருவாங்க. கடைசில உனக்கு பொருள் வேணும்னா இந்த வேலையை முடின்னு சொல்லி சில நேரம் பெரிய பெரிய பணக்கார ஆண்களுக்கு விருந்தாவும் அனுப்பப்படறாங்க. இதனால அவங்க வாழ்க்கையே பாதிக்க படும்னுல்லாம் அவங்க யோசிக்கிற நிலமைல இல்ல.

என்னை இங்க கூட்டிட்டு வந்தது என்னோட கருமுட்டையை என் அனுமதி இல்லாம வலுக்காட்டாயப்படுத்தி எடுத்து விக்க தான். நல்ல வேலை எந்த ஒரு தப்பும் நடக்கும் முன்ன வந்து காப்பாதிட்டிங்க. ஆனா எங்க ஹாஸ்டலையே வாரத்துக்கு ஐந்து பொண்ணுங்களை இதுக்காக வச்சுருக்கான். அவங்க எல்லோரையும் காப்பாத்தனும் சார். என்னை எங்க ஊருக்கு அனுப்பிடுங்க சார். குடும்ப கஷ்டத்துக்கு பிழைக்க வந்தா வாழ்க்கையே போய்டும் போல.." என்றாள் கண்ணீருடன்.

"எல்லாம் சரியாகிடும் மா. என்ன அதுக்குள்ள ஊருக்கு போறேன்னு சொல்லிட்ட? சரி நீ எங்கே வேலை செய்ற?" என்றான்.

"மினு சில்க்ஸ் ல சேல்ஸ் ல இருக்கேண்ணா." என்றாள்.

"என்னம்மா? பி.ஏ தமிழ் படிச்சுட்டு சேல்ஸ் ல இருக்கேன்னு சொல்ற? சரி உனக்கு தங்க பாதுகாப்பான ஒரு இடமும் நல்ல வேலையும் நான் ஏற்பாடு பண்றேன். சரியா? நீ தைரியமா இருந்தா தானே உன் குடும்பத்தை காப்பாத்த முடியும்?" என்றால் ஷிவா.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now