36

637 22 1
                                    

"ஏன் அறிவு திட்ற?" என்றான் பாவமாய் முகத்தை வைத்து கொண்டு.

"டேய் டேய் நல்லவன் மாதிரியே நடிக்காத? என்ன என் புருஷன் என்னை காலேஜ்கு கூப்பிட சொன்னாரா?" என்றதும் கருமணிகள் இரண்டும் வெளிவருவது போல் முழித்தான் ஜீவா.

"மூஞ்ச பாரு... ஒரு பொய் கூட ஒழுங்கா சொல்ல தெரியலை. உன்னை போய் ஹெல்ப் கேட்டாரு பாரு என்ற மாமா. அவரை சொல்லனும்." என்று தலையிலடித்து கொண்டவள்.

"நேத்து என்ன நடந்துச்சு? எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை... அதனால ஒன்னு விடாம இப்போ சொல்ற? இல்ல பிரெண்டுன்னு பார்க்காம கொலை பண்ணிடுவேன்." என்றாள்.

"அடிப்பாவி... உன் கையாள சாகவா அடம்பிடிச்சு பிரெண்டானேன்?" என்றான் ஜீவா.

"அது என் தப்பில்லை. எல்லாம் உன் விதி. நான் எதுவும் சொல்றதுக்கில்லை." என்று உதட்டை பிதுக்கினாள் அழகாய்.

இவற்றை ஜீவாவின் போனில் கேட்டு கொண்டிருந்த ஷிவாவிற்கு சிரிப்பு தாளவில்லை.

'நான் அவனை ஹெல்ப் கேட்டேன்னு எப்படி கண்டுபிடிச்சா? நான் மாமாவா? அடியேய் உன் சேட்டை ரொம்ப அதிகமா போகுது.' என்று செல்லமாய் திட்டிக் கொண்டவன்.

"எல்லாம் சரியாகட்டும்டி செல்லம். அப்புறம் பார்க்குறேன் உன் திமிரெல்லாம் எப்படி என்கிட்ட பலிக்குதுன்னு?" என்று சிரித்தான்.

"என்ன நடந்துச்சா? உன் புண்ணியத்துல ஏதோ சினிமா படத்தை பார்த்த மாதிரி இருந்தது." என்று நடந்த கதையை கூறவும் இவ்வளவு நடந்துருக்கான்ன்னு அதிர்ச்சியில் வாயடைத்து நின்றாள் அழகி.

"அய்யோ அதான் செம காண்டாகி பேசாம இருக்காரா?" என்று புலம்பியவள் தலையிலடித்து கொண்டாள்.

"என்னது பேசலையா? யார் பேசளை?" என்றான் ஜீவா வாயை மூடாமல் அதிர்ச்சியாக.

"ஈ போக போகுது? வாயை மூடுடா குரங்கு. விடு என் மாமா தான கோபமா இருக்காரு... அதெல்லாம் நாங்க அவர் கோபத்தை குறைச்சுடுவோம். போடா... வந்துட்டான் பேசலையான்னு.. பசிக்கலையான்னு..." என்று ஜீவாவின் தலையில் நங்கென்று கொட்டினாள்.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now