30

530 16 0
                                    

"இல்ல ப்ளீஸ். இப்படி பண்ணாத. அதுக்கு என்னை உயிரோடு கொன்னுடு." என்றாள் கண்ணீரோடு.

"ஹா..ஹா..ஹா.." என்று சிரித்தவன்.

"அப்படியே நீ செத்தாலும் எனக்கு லாபம் தான்." என்றான்.

இரு கால்களில் இருந்து அவளின் சேலை மெதுவாய் மேலேற தொடங்க, நரக வேதனையில் துடிக்க தொடங்கினாள்.

அவளின் கெண்டை கால்கள் தெரிய தொடங்கும் பொழுதே அதிரடியாக உள்ளே நுழைந்த ஷிவா இருவரையும் அடித்து நொறுக்கினான்.

அதற்குள் உள்ள வந்தவர்கள் வேகமாய் அப்பெண்ணின் கட்டவிழ்த்து வெளியே கூட்டி சென்றனர்.

"ஏன்டா பொண்ணுங்கன்னா என்ன உங்களுக்கு அவ்ளோ சாதாரணமா போச்சா?" என்று போட்டு அடிக்க முகமின் வடிவமே மாறி போய் மயங்கிருந்தான் அவன்.

"இவனை நம்ம இடத்துல வைங்க. அவங்களை சேப்பா வைங்க. வந்து பேசுறேன்." என்று அவர்களை அனுப்பிவிட்டு மீண்டும் உள்ளே நுழைந்து எல்லா இடத்திலும் தேடியபின், "அந்த இன்னொரு பொண்ணும் இவளும் எங்க?" என்று முகத்தில் இருந்த வியர்வையை துடைத்தபடி யோசிக்க,லேசான முனகல் சத்தம் கேட்கவும் எங்கே வருகிறது என்று தேட தூரத்தில் கை கால்கள் கட்டப்பட்டு வாய் அடைத்து செடிகளின் நடுவே வீசப்பட்டிருந்தாள் மயில்.

ஓடி சென்று அவளை தூக்கியவன் வாயில் இருந்த துணியை எடுத்தவுடன் இருமல் தொடர்ந்தது.

"சார் அந்த பெண்ணை காப்பாத்துங்க. அதோ... அங்க தான் கொண்டு போனாங்க." என்றாள் மூச்சு பலமாக வாங்க.

"யாரு கூட்டிட்டுப்போனா?" என்றான் கோபமாய்.

"அஞ்சு பேர்... ரொம்ப குடிச்சிருந்தாங்க... ஒரு பொண்ணு... அவளுக்கு போதை மருந்து ஊசி போட்ருக்காங்க போல. சுயநினைவு இல்லாம இருக்கா..." என்றாள் கண்ணீர் வழிய.

"சரி... சரி.. நான் போறேன். நீ அதோ பாரு... என் கார் இருக்குல்ல... அதுல போய் உட்காரு..." என்று அந்த திசையில் ஓடினான்.

அங்கே அடர்ந்த காடு போல் இருக்க, சற்று தொலைவில் ஒரே ஒரு மர வீடு மட்டும் இருந்தது.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now