23

560 21 0
                                    

"இது மஞ்சு அக்கா தானே?" என்றாள் குரல் நடுங்க.

சிவாவும் லேசாய் அதிர்ந்து "ஆமா இது மஞ்சு தான். உனக்கு அவளை தெரியுமா?" என்றான்.

"என் க்ளோஸ் பிரென்ட் லதாவோட பெரியம்மா பொண்ணு தான் இவங்க. இப்போ கூட இங்க இவ வீட்டுக்கு வந்துருக்கிறதா நேத்து கூட சொன்னா லதா. அவங்களா இப்படி? இப்போ என்ன பண்றது? இவர்களும் வழி மாறி போக கூடாது. அண்ணனையும் இதில் இருந்து வெளியே கொண்டு வரணும் என்ன பண்றது?" என்று நகத்தை கடித்தாள்.

மெதுவாய் அவள் இதழில் ஒரு அடி போட்டு, "நகம் கடிக்காத. சரி உன் பிரென்ட்கு அண்ணன் இல்லை மஞ்சுக்கு அண்ணன் இருக்காங்களா?" என்றான் ஷிவா.

"ம்ம் மஞ்சுக்காக்கு அண்ணன் இல்ல. ஆனா என் பிரென்ட் கு அண்ணன் இருக்காங்க. எனக்கு கூட தெரியும் பேசிறுக்கேன்." என்றாள்.

"அப்போ இப்போ போன் பண்ணி உன் பிரென்ட்டையும் அவங்க அண்ணனையும் நாளைக்கு காலைல வர சொல்லு. முக்கியமான விஷயம் பேசனும்னு சொல்லு." என்றான் ஷிவா.

"சரி" என்று உடனே போன் செய்து கூறினாள்.

"சரி நாளைக்கு காலைல நீயும் நானும் போய் பார்த்துட்டு வரலாம். நீ காலேஜ் போகணும்ல?" என்றான்.

"நான் லீவ் போடறேன்." என்றாள்.

"நேரமாச்சு தூங்கலாம்." என்று கீழே படுக்க போனவளை தடுத்தான்.

"நீ மேல தூங்கு அகி." என்றான்.

"இல்ல நீங்க மேல தூங்குங்க. " என்றவள் திரும்பி "அதென்ன ஆகி?"  என்றாள்.

"அது அப்படி தான்." என்று புன்னகைத்தவன்.

"நீ தூங்கு." என்று கீழே படுத்து கொண்டான்.

"நானும் கீழேயே படுத்துக்குறேன்." என்று அவளும் ஒரு போர்வை விரித்து கீழே படுத்தவளை முறைத்து, "ரொம்ப பண்ற ஆகி நீ. போ போய் மேல படு." என்றான்.

"சரி ரெண்டு பேருமே மேலே தூங்கலாம் வாங்க." என்று சிவாவை எழுப்பினாள்.

"சொன்னா கேட்க மாட்ட." என்று புலம்பியபடி மேலே ஒரு ஓரமாய் படுத்து கொண்டான்.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now