தன் வகுப்பறைக்குள் நுழைந்த அழகியின் பார்வை தன் இருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவனை கண்டு ஒரு நொடி கோபம் ஏற்பட்டாலும் தன்னை அமைதி படுத்தி கொண்டு சென்று அமர்ந்தாள்.
வகுப்பறைக்குள் வந்த பேராசிரியை பாடம் நடத்தி முடித்த பின், "நாளைக்கு எல்லோரும் ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணனும் ஞாபகம் இருக்குல்ல? இதுக்கு இன்டெர்னல் மார்க் இருக்கு. சோ எல்லோரும் முடிச்சுருங்க." என்று வெளியேறினார்.
அழகி தான் இன்னும் ப்ராஜெக்ட்டை செய்யாததை நினைத்து தலையில் அடித்து கொண்டாள்.
"மறந்தே போய்ட்டேன்." என்று யோசிக்க.
"இந்தாங்க." என்று அவள் முன் ஒரு பைலை நீட்டினான் ஜீவா.
' என்னதிது?' என்பதை போல் அவனையும் பைலையும் மாறி மாறி பார்த்தாள்.
"ரெண்டு பேரும் சேர்ந்து தான் ப்ராஜெக்ட் முடிக்கனும். நான் பாதி முடிச்சுட்டேன். மீதியை நீங்க முடிச்சுருங்க." என்றான்.
வாங்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்தாள் அழகி.
"ரொம்ப யோசிக்காதிங்க. இது ப்ரொஜெக்ட். இதை வச்சு பிரென்ட்ஷிப் லாம் கேட்க மாட்டேன்." என்றான் ஜீவா.
எதுவும் பேசாமல் வாங்கி கொண்டவள் தன் புத்தகத்தை திறந்து வைத்து கொண்டாள்.
அந்த நாள் கடந்து போக,
வீட்டில் எழுத வேண்டிய ப்ராஜெக்ட்டை சாப்பிட இரவு போகாமல் கூட எழுதிக் கொண்டிருந்தாள்.
ஷிவாவே அவளுக்கு சாப்பாட்டை எடுத்து வந்து அவள் வேண்டாம் என்று கூறியதை கேட்காமல் மிரட்டி ஊட்டி விட்டான்.
எழுதி முடிக்கவும் அவளை தன் மடியில் அமர்த்தி கொள்ள, சிவாவை முறைத்தாள் அழகி.
"ப்ளீஸ்டி. கொஞ்ச நேரம்." என்று அழகியை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டான். அந்த நேரம் அழகியை அழைத்தாள் தோழி.
"ஹலோ சொல்லுடி." என்றாள் அழகி.
"அறிவு எப்படி மா இருக்க?" என்றார் அ தோழியின் அண்ணன்.
YOU ARE READING
என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)
General Fictionதொலையவிருந்த வாழ்க்கையை மீட்டு கொடுத்த காதல் கதை