19

602 21 0
                                    

"ஹெலோ!" என்றதும் "தனியா வந்துட்டயா?" என்றான் கண்ணன்.

"ஹ்ம்" என்றான் ஷிவா.

"நீ அவளை உயிருக்கு உயிரா விரும்புறேன்னு தானே என் அப்பா அம்மா அடுத்து உன்னை நம்பி கல்யாணம் பண்ணி கொடுத்தேன். ஆனா நீ என்ன பண்ணி வச்சிருக்க? தாலி கட்டி மூணு நாள்கூட ஆகலை அதுக்குள்ள அவளுக்கு சங்கு ஊத பார்த்துருக்க இல்ல? இதான் உன் அளவு கடந்த லவ்வா?" என்றான் மிகவும் கோபமாய்.

"டேய் கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா திட்டிட்டு இருக்கியே உனக்கு போர் அடிக்கலை?" என்றான் ஷிவா விளையாட்டாய்.

"அங்க நம்மளால காப்பாத்த முடியாத சிட்டிவேஷனா இருந்திருந்தா என் தங்கச்சி இந்நேரம் உன் வீட்டு ஹால்ல பொணமா படுத்திருந்திருப்பா அப்போ உனக்கு போர் அடிக்கும்ல?" என்றான் கண்ணன்.

"போதும் கண்ணா ரொம்ப பேசுற? முதல்ல என்ன நடந்ததுன்னு தெரியாம பேசாத..." என்று சிவாவும் கோபமாக பேச, "போதும் நாளைக்கு காலைல நான் வரேன். என் தங்கச்சியை கூட்டிட்டு போக.." என்று பட்டென்று போனை வைத்தான் கண்ணன்.

"லூசு பய. என்ன சொல்லவரேன்னு கூட கேட்க மாட்றான்... வரட்டும் நாளைக்கு... நீ எப்படி என் பொண்டாட்டிய கூட்டிட்டுப் போறேன்னு நானும் பார்க்கிறேன்." என்று புலம்பிக் கொண்டே கீழே சென்றான்.

'பேசியாச்சா?' என்றாள் விழிகளால் அழகி.

'இவ ஒருத்தி இவுங்க அண்ணன் பேசியே கொல்றான். இவ என்னை தூரத்துல நிக்க வச்சே பார்த்து கொல்றா.. ஆக மொத்தம் என்னை பாடா படுத்தணும்னு தீயா வேலை செய்றாங்கன்னு நினைக்கிறேன்.' என்று உள்ளுக்குள் புலம்பினாலும்... மெல்லிய புன்னகையை உதிர்த்து சாப்பிட அமர்ந்தான்.

"வா டா அழகிம்மா சாப்பிடுவ. முகத்தை பாரு எவ்ளோ சோர்வா இருக்குன்னு?" சிவாவின் அருகில் அமர வைத்து தானே ஊட்டி சாப்பிட வைத்தார் அவனின் தாய்.

என் விடியலே நீதானடி!-(முழுதொகுப்பு)Where stories live. Discover now