16 ஆதித்யா யார்?

2.1K 98 15
                                    

16 ஆதித்யா யார்?

ஒரு கிண்ணத்தில் நிலக்கடலையை வைத்துக்கொண்டு, அமர்ந்திருந்தாள் கமலி. அதை சாப்பிடவேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை. ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தை பற்றி தெரிந்து கொண்டதிலிருந்து, ஆதித்யாவை பற்றியே சதா யோசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவனைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவள் நினைத்தாள். அவள் அவனுடைய மனைவி. ஆனால், அவனைப் பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அவன் ஏன் அவளிடம் பொய் கூறினான் என்பதை தெரிந்து கொண்டே தீரவேண்டும் அவளுக்கு.

அன்று சனிக்கிழமை என்பதால் கல்லூரி விடுமுறை. சட்டென்று அவளுக்கு ஏதோ தோன்ற, பாட்டியின் அறையை நோக்கி ஓடினாள். அவளைப் பார்த்து சினேகமாய் புன்னகைத்தார் பாட்டி. தன் மனதில் இருந்ததை பாட்டியிடம் கூறினாள் கமலி.

"ஆதி உன்னோட புருஷன். நீ நினைக்குற எதையும் செய்ய உனக்கு உரிமை இருக்கு. தாராளமா செய்" என்றார்.

"ஆதிஜிக்கு கோபம் வந்தா என்ன செய்யறது?"

"அவன் நிச்சயம் கோவப்பட மாட்டான்"

"சரி, ஆனா, அவர்கிட்ட எதுவும் சொல்லாதீங்க"

"ஓ... சர்ப்ரைஸா?"

ஆமாம் என்று தலையசைத்துவிட்டு சமையலறைக்கு ஓடினாள் கமலி. மதிய உணவை சமைத்து அதை ஹாட் பாக்ஸில் அடைத்துக் கொண்டாள். சமையலறைக்கு வந்த பாட்டி, அவள் சமைத்த உணவு வகைகளை பார்வையிட்டார்.

"எல்லாமே ஆதிக்கு பிடிச்ச சாப்பாடா சமைச்சிருக்க போல இருக்கே...?"

"அவருக்கு பிடிக்குமா?" என்றாள் ஆவலாக.

"நிச்சயம் பிடிக்கும்..."

பாட்டிக்கு தெரியாதா, ஆதித்யா கமலியின் மீது எவ்வளவு பிரியத்துடன் இருக்கிறான் என்று...! தன் மனைவி தனக்காக செய்திருக்கும் உணவு வகைகளை பார்த்து, நிச்சயம் பேச்சிழந்து நிற்க போகிறான் ஆதித்யா என்று எண்ணிக்கொண்டார் பாட்டி.

கார் ஓட்டுனரான இளவரசனை அழைத்து, கமலியை இன்ட்காம் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார் பாட்டி. ஏனென்று தெரியவில்லை, கமலிக்கு பதட்டமாயிருந்தது... இன்ட்காம் அலுவலக வளாகத்தில் கமலியை இறக்கிவிட்டார் இளவரசன்.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Opowieści tętniące życiem. Odkryj je teraz