21 ஆதித்யாவின் நடவடிக்கை
கல்லூரி
ராகுல் தனது நண்பர்களுடன் வருவதை கவனித்தாள் லாவண்யா. ஆனால், அவளை கண்டுகொள்ளாமல் கடந்து சென்றான் அவன். லாவண்யாவிற்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.
"நில்லு ராகுல்..."
திரும்பிப் பார்த்து புன்னகை புரிந்தான் ராகுல்.
"அண்ணி எங்கே?" என்றான்.
"உங்க அண்ணியை தவிர வேற யாரும் உன் கண்ணுக்கு தெரிய மாட்டாங்களா?"
"அண்ணியை கவனமா பாத்துக்க சொல்லி ஆதி என்கிட்ட சொல்லி இருக்கான் தெரியுமா? அது சரி, வேற யாரை நான் கவனிக்கணும்னு நினைக்கிற?"
அவள் கூறியதை புரிந்து கொள்ளாதவனைப் போல தலையை சொறிந்தான் ராகுல்.
ராகுலுடன் நின்றிருந்த நண்பர்களைப் பார்த்து,
"நான் ராகுல்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" என்றாள் லாவண்யா
அவர்கள் ஒன்றும் கூறாமல் அங்கிருந்து சென்றார்கள்.
"என்கிட்ட நீ என்ன பேசணும்?" என்றான் ராகுல்.
"உனக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாதா?"
"இருக்கே... ஆனா, தேவைப்படும் போது தான் நான் அதை யூஸ் பண்ணுவேன்"
"நீயும்... உன் அறிவும்... நான் இந்த காலேஜ்ல சேர்ந்து ஆறு மாசம் ஆச்சு. நான் இங்க எதுக்கு சேர்ந்தேன்னு உனக்கு தெரியுமா?"
"இது ரொம்ப நல்ல காலேஜ்..."
"கடவுளே... நான் உனக்காக தான் இங்க சேர்ந்தேன்"
"எதுக்கு? " என்றான் புரியாமல்.
"ஏன்னா, என்னோட முட்டாள் இதயம், என் காதலை புரிஞ்சிக்காத ஒரு முட்டாள் மேல காதல் வசப்பட்டுடுச்சி..."
"யார் அந்த அதிர்ஷ்டம் கெட்டவன்?" என்றான் சிரிப்பை அடக்கியபடி ராகுல்.
"என்னது அதிர்ஷ்டம் கெட்டவனா?"
"பின்ன என்ன? காதலிக்கிறேன்னு சொல்றதையே நீ இந்த அழகுல சொல்றியே... உன் கூட அவன் எப்படித் தான் வாழ போறானோ...!"
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.