47 பணம் பத்தும் செய்யும்

1.9K 99 17
                                    

47 பணம் பத்தும் செய்யும்

தூக்கத்திலிருந்து பதறியடித்துக் கொண்டு எழுந்தாள் கமலி. யாருமற்ற வனாந்தரத்தில், பேய் என வீசும் புயல் காற்றுக்கு நடுவே, தன்னந்தனியே கண்ணீர் சிந்தியபடி *ஆதிஜி* என்று அலறியடித்துக் கொண்டு ஓடுவது போல் வந்த கனவினால் பயந்து நடுங்கினாள் கமலி.

தலையைப் பிடித்துகொண்டு மூச்சுவாங்கிய படி அமர்ந்திருந்தாள். அவளுக்கு உடனடியாக ஆதித்யாவிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால், கடிகாரம்  மணி 12 என்று காட்டியதால், தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டாள். தூக்கம் வராமல் வெகு நேரம் கட்டிலில் புரண்டு, புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள் கமலி. தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தோன்ற, எழுந்து அமர்ந்து தண்ணீர் ஜக்கை எடுத்தாள். அது காலியாக இருந்தது. கட்டிலை விட்டு இறங்கி, தண்ணிர் கொண்டு வர சமையலறையை நோக்கி சென்றாள்.

அவள் ரேணுகாவின் அறையைக் கடந்து பொழுது, அங்கு மெல்லிய பேச்சு குரல் கேட்டது. தனக்கு ஏற்பட்ட கனவைப் பற்றி ரேணுகாவிடம் சொன்னால் என்ன என்று தோன்றியது அவளுக்கு. ஆனால், சரவணன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அவள் கால்கள் அசையாமல்  நின்றன.

"இப்போ வருத்தப்பட்டு என்ன செய்யிறது?" என்றான் அவன்.

"சரவணன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்? ஒருவேளை அது ரேணுகாவாக இருந்தால், அவர் எதற்காக வருத்தப்பட வேண்டும்? வருத்தப்படும் அளவிற்கு அப்படி அவர் என்ன செய்தார்?" என்று யோசித்தாள் கமலி.

"இப்படி எல்லாமே தலைகீழா மாறிப்போகும்னு யார் எதிர்பார்த்தது?" என்று சிடுசிடுத்தாள் ரேணுகா.

"ஆதிக்கு கல்யாணம் பண்ணி வைக்காதேன்னு நான் உன்னை அப்பவே எச்சரிக்கை பண்ணேன். நீ தான் கேக்கல"

அந்த வார்த்தைகளைக் கேட்டு முகத்தை சுருக்கினாள் கமலி. சற்று நெருங்கி வந்து அவர்கள் பேசுவதை கேட்கலானாள்.

"என்னை வேற என்ன செய்ய சொல்றீங்க? ஷில்பாவும் அவங்க அப்பாவும் ஆதியை வளைச்சு போட, எப்படி எல்லாம் முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க...? ஷில்பா மட்டும் ஆதிக்கு பொண்டாட்டியா வந்தா, ஆதியோட வாழ்க்கைல அவளோட கை ஓங்கும், அவ நம்மளை ஆதிக்கம் செய்ய ஆரம்பிச்சிடுவான்னு தான், படிப்பறிவு இல்லாத, வெகுளியான பட்டிக்காட்டு பொண்ணா பாத்து அவனுக்கு பொண்டாட்டியா கொண்டு வந்தேன். அவன் எப்பவும் என்னோட கண்ட்ரோல்ல இருப்பான்னு நினச்சேன். ஆனா, அவன் என்னடான்னா, அவளை காலேஜுக்கு அனுப்பி எல்லாத்தையும் சொல்லிக் கொடுத்து பெரிய ஆளாகிட்டன். நம்ம கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விதமா, அந்த பட்டிக்காட்டு பொண்ணு எல்லாத்தையும் சுலபமா கத்துக்கிட்டு, ஆஃபீஸ் கணக்கிலிருந்த வித்தியாசத்தை எல்லாம் கண்டு பிடிச்சிட்டா." என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாக.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now