62 குடும்பம்
சரவணனிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்றாள் ரேணுகா.
பிரபாகரன், ரேணுகாவின் திருமணம் எளிய முறையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. நீதிமன்ற வளாகத்தில் அனைவரும் குடும்பத்துடன் கூடியிருந்தார்கள். அங்கிருந்த அனைவரையும் விடவும் ஷாலினி தான் அதிக சந்தோஷமாய் காணப்பட்டாள். தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி பிரபாகரன் அவள் கழுத்தில் போட்டு அவளை கலகலவென சிரிக்க வைத்தான். வீடு வந்து சேரும் வரை அந்த மாலையை கழட்டாமல் அலட்டலாக சுற்றிக் கொண்டிருந்தாள் ஷாலினி. ரேணுகாவை பிரபாகரனின் இல்லத்தில் முறைப்படி விட்டு விட்டு வீடு வந்து சேர்ந்தார்கள் அனைவரும்.அன்று முழு மனநிம்மதியை உணர்ந்தான் ஆதித்யா. அவன் தோளில் இருந்த மிகப் பெரிய பாரம் இறங்கியதாக உணர்ந்தான் அவன்.
ஓராண்டுக்குப் பின்
அமைதியகத்தில் மிகப்பெரிய பார்ட்டி நடந்து கொண்டிருந்தது. கமலி பிபிஏவில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக அந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தான் ஆதித்யா. கமலியின் அம்மா குடும்பம், பிரபாகரனின் குடும்பம், சமீர்கானின் குடும்பம் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.
கேக்கை வெட்டச் சொல்லி கத்தியை கமலியிடம் ஆதித்யா கொடுக்க, அவன் கையைப் பற்றி கேக்கை வெட்டினாள் கமலி. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு கொண்டபின், அனைவருக்கும் அந்த கேக்கை வழங்கினாள் கமலி. தான் செல்லும் இடமெல்லாம் ஆதித்யாவின் பார்வை தன்னை பின்தொடர்வதை உணர்ந்த கமலி, *என்ன?* என்று பார்வையால் அவனைக் கேட்க, *பிறகு பேசலாம்* என்று சைகை செய்தான் ஆதித்யா. என்னவாக இருக்கும் என்று எண்ணி முகம் சுருக்கினாள் கமலி.
பெண்கள் அனைவரும் கூடி கூடி ஏதோ ரகசியம் பேசுவதை கண்டார்கள் ஆதித்யாவும், பிரபாகரனும். அவர்கள் அருகில் செல்லும்போதெல்லாம் பெண்கள் பேசுவதை நிறுத்தினார்கள்.
"அப்படி என்ன இவங்க டிஸ்கஸ் பண்றாங்கன்னு எனக்கு புரியலை" என்றான் ஆதித்யா.
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.