22 நான் உன்னுடன் டேம் இட்

2.2K 108 29
                                    

22 நான் உன்னுடன் டேம் இட்

அமைதிகம் திரும்பினான் ஆதித்யா. ஷில்பாவின் விஷயத்தில் அவன் கோபமாய் இருந்தாலும், அதில் அவனுக்கு சாதகமான விஷயங்களும் இருக்கத் தான் செய்கிறது. கமலியுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள இது ஒரு சிறந்த சந்தர்ப்பம். தன்னுடைய வாழ்க்கையில் அவளுடைய இடம் என்ன என்பதையும், அவள் தனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்பதையும் அவளுக்கு காட்ட முடியும்.

வரவேற்பறையில் கமலி இருக்கவில்லை. தனது அறைக்கு சென்றவன், அங்கு கமலி ஷாலினியுடன் சேர்ந்து வீட்டுப்பாடம் செய்து கொண்டிருந்ததை பார்த்தான். அவர்களுடைய புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் அவர்களை சுற்றி இறைந்து கிடந்தன. அவனைப் பார்த்தவுடன் எழுந்து நின்றாள் கமலி.

"ஆதிஜி நீங்க வந்துட்டீங்களா? டூ மினிட்ஸ், நான் இதையெல்லாம் கிளியர் பண்ணிடுறேன்" என்றாள்.

"வேண்டாம்... உன்னுடைய வேலையை முதல்ல முடி..."

"உங்களுக்கு நான் காஃபி கொண்டு வரட்டுமா?"

"நான் முத்துவை கொண்டு வர சொல்றேன்"

"இல்ல ஆதிஜி, நான் என்னுடைய வேலையை முடிச்சிட்டேன்.  ஷாலினிக்கு ஹெல்ப் தான் பண்ணிக்கிட்டு இருந்தேன்"

"ஆமாம் மாமா. மாமி அவங்க ஹோம்வொர்க்கை முடிச்சுட்டாங்க." என்றாள் ஷாலினி

"இன்னைக்கு உன்னோட நாள் எப்படி இருந்தது?" என்று ஆதி கேட்க,

ஷில்பாவுடன் நடந்த உரையாடலை நினைத்துப் பார்த்துக் கொண்டாள் கமலி. அவளது முகம் மாறியதை கவனித்தான் ஆதித்யா.

"நல்லா போச்சு ஆதிஜி" என்றாள் சுரத்தே இல்லாமல்.

"அதை ஏன் இவ்வளவு சோகமா சொல்ற?" என்று புன்னகைத்தான் ஆதித்யா.

"என்னோட ஃபிரண்டுக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு"

"அதுக்காக நீ சந்தோஷம் தானே படணும்?"

"இல்ல... அவ படிப்பை டிஸ்கன்டினியூ பண்ண போறா" என்றாள் சோகமாக.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now