35 அவளை நானறிவேன்...!

2K 102 12
                                    

35 அவளை நானறிவேன்...!

மறுநாள் காலை

கமலியை  சங்கட படுத்த கூடாது என்று தன்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு தூரம் பார்த்து நடந்து கொண்டான் ஆதித்யா. அவள் தன்னிடம் சகஜமாக இருக்க வேண்டும் என்று அவன் விரும்பினான். அவளை சங்கடப்படுத்தும் படி நடந்து கொண்டால், அவள் தன்னிடம் இயல்பாய் இருப்பதை நிறுத்திவிடலாம். அது நிச்சயம் நடக்கக் கூடாது. வெகு சகஜமாய் தனது வேலைகளை செய்து கொண்டிருந்தான். அதற்கு நிச்சயம் பலன் இருந்தது. கமலி சஞ்சலனமின்றி காணப்பட்டாள். ஆனால் அதற்காக, அவள் ஆதித்யாவை திருட்டுத்தனமாய் பார்க்காமல் இருந்தாள் என்று கூறுவதற்கில்லை.

குளித்து முடித்து புத்துணர்ச்சியுடன் குளியலறையிலிருந்து வெளியே வந்த ஆதித்யா, அவளைப் பார்த்து சிநேகமாய் புன்னகைத்தான். தனது பாடத்தை மேற்பார்வை செய்துகொண்டிருந்த கமலியும் அவனைப் பார்த்து புன்னகைத்தாள். தன் ஈர தலையை துவட்டியபடி கண்ணாடியின் முன் சென்று நின்றான் ஆதித்யா. அவனுக்கு தெரியும், கமலி, கண்ணாடியில்  தன்னையே மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று. அவனுக்கும் கூட அவளை பார்க்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், அவனால் அது இயலாது.

அவன் மனதில் ஒரு வேடிக்கையான எண்ணம் தோன்றியது. வேகவைத்த கோழி முட்டையை போல் மாறப் போகும் அவளது கண்களைப் பார்க்க தயாரானான் ஆதித்யா. தனது சிரிப்பை அடக்கியபடி, அந்த *சிறப்பு வாய்ந்த வாசனை திரவியத்தை* எடுத்து தன் மீது தெளித்துக் கொண்டான். ஆதித்யாவின் கணக்கு தவறாக வில்லை. அவளது கண்கள் உண்மையிலேயே வெளியே வந்து விழுந்து விடும் அளவிற்கு பெரிதாய் போனது. அந்த வாசனை திரவியத்தை அவள் ஏற்கனவே நுகர்ந்திருந்தாலும், இந்த முறை, அது வித்தியாசமாய் இருந்தது. அவளது சித்தத்தை கலக்கிய நிகழ்வை நினைவு படுத்தியது. தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள் கமலி. அவளது நிலையைப் பார்த்து உள்ளூர நகைத்துக் கொண்டான் ஆதித்யா. கட்டிலுக்கு வந்து அவளது அருகில் அமர்ந்து கொண்டான்.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now