54 ஆதித்யாவின் பரிசு
ஆறு மாதங்களுக்குப் பிறகு
அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய ஆதித்யா, வரவேற்பறையில் இருந்த சோபாவில் சாய்ந்தமர்ந்து, கண்ணை மூடிக் கொண்டான். அவன் மிகவும் சோர்வாக காணப்பட்டான். கல்லூரியிலிருந்து மயூரியுடன் வீடு திரும்பிய கமலி, அவன் அப்படி அமர்ந்திருப்பதை பார்த்து பரபரவென அவனை நோக்கி ஓடி சென்று அவன் அருகில் அமர்ந்தாள்.
"என்ன ஆச்சி ஆதிஜி? எதுக்காக இங்க தனியா உக்காந்து இருக்கீங்க? உங்க உடம்புக்கு ஒண்ணும் இல்லையே?"
ஒன்றுமில்லை என்று தலையசைத்தான் ஆதித்யா.
"நீங்க எப்போ வந்தீங்க?"
"இப்ப தான் டா வந்தேன்"
" உங்களுக்கு காபி கொண்டு வரட்டுமா?"
"நான் முத்துவை கொண்டு வர சொல்றேன். வா நம்ம ரூமுக்கு போகலாம்"
அவனை குழப்பத்துடன் பின்தொடர்ந்தாள் கமலி. ஆதித்யா மன அழுத்தத்தில் இருப்பது அவளுக்கு நன்றாக தெரிந்தது.
"என்ன ஆச்சு ஆதிஜி, நீங்க ரொம்ப டென்ஷனா இருக்கீங்க?"
"ஒன்னும் இல்ல. நீ இன்னைக்கு எக்ஸாம் எப்படி எழுதின?"
"ரொம்ப ஈசியா இருந்தது. இந்த தடவையும் நான் தான் ஃபர்ஸ்ட் மார்க் வாங்குவேன்"
"குட். போய் அடுத்த எக்ஸாமுக்கு படி"
தன் முகத்தை சுளித்து அவனை பார்த்தாள் கமலி.
"என்ன?"
"உண்மையிலேயே உங்களுக்கு ஒன்னும் இல்லையே?"
"ஏன் அப்படி கேட்கிற?"
"இன்னைக்கு நான் எழுதின எக்ஸாம் தான் கடைசி. நீங்க கூட காலையிலே என்னை விஷ் பண்ணிங்க"
"ஆமாம்ல நான் மறந்துட்டேன்"
நகத்தை கடித்தாள் கமலி.
"ஹாலிடேஸ்ல என்ன செய்யப் போற?"
"இன்னும் எதுவும் டிசைட் பண்ணல"
"அப்படின்னா நீ ஆஃபீஸுக்கு வரப் போறது இல்லையா?"
"இல்ல"
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.