26 என்னோட ஆதிஜி

2.2K 98 7
                                    

26 என்னோட ஆதிஜி

தனது அம்மா வீட்டில், அம்மாவுடனும் அத்தையுடனும்  சந்தோஷமாய் நேரத்தை கழித்துக் கொண்டிருந்தாள் கமலி. ஆனால் அதற்காக அவள் ஆதித்யாவை நினைக்கவில்லை என்று அர்த்தமல்ல. ஆதிஜி இல்லாமல் இருப்பது எவ்வளவு கடினமானது என்பதை அவள் அங்கு தெரிந்து கொண்டாள். தனது அம்மா, அத்தையுடன் இருப்பதைவிட ஆதியுடன் இருப்பதை தான் அவள் மனம் நாடுகிறது என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. அவள் மனம், சதா ஆதித்யாவையையே நினைத்துக் கொண்டிருந்தது.

கல்யாணமே செய்துகொள்ள மாட்டேன் என்று கூறி, அழுது, அடம் பிடித்த கமலி, தனது கணவனை பற்றி வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து செல்வியும் சுந்தரியும் வியந்து போனார்கள். குறிப்பாய் அவள் ஆதித்யாவை *என்னோட ஆதிஜி* என்று அழைத்த விதம், அவர்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

"உன் கூட ஆதி தம்பியும் வந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும். ஆனா, நம்ம வீடு அவருக்கு வசதியா இருக்காது" என்றார் செல்வி.

"இல்லம்மா... என்னோட ஆதிஜி அப்படியெல்லாம் நினைக்க மாட்டாரு. அவர் எல்லாரோடவும் சந்தோஷமா இருக்கணும்னு தான் நினைப்பாரு. கூப்பிடாமலேயே என்னோட ஃபிரண்ட் கல்யாணத்துக்கு வந்தார் தெரியுமா?"

"நிஜமாவா?"

"ஆமாம். ஆதிஜி ரொரும்ம்ம்ப நல்லவரு"

அவள் கையைப் பற்றி அமரவைத்து, தானும் அவளுடன் அமர்ந்து கொண்டார் செல்வி.

"அவரு ரொம்ப நல்லவரு... நீ?"

"நானும் நல்லவ தான்..." என்றாள் தனது தோள்களைக் குலுக்கியபடி கமலி.

"ஆதி தம்பி உன் கூட சந்தோஷமா இருக்காரா? நீ அவரை எல்லாவிதத்திலும் சந்தோஷமா வச்சிருக்கியா?"

"ஆமாம்மா... அவர் சொல்ற எல்லாத்தையும் நான் செய்வேன். அவர் சொல்றது எதையும் நான் மறுத்தே பேசமாட்டேன். நீங்க சொன்ன எல்லா விஷயத்தையும் நான் ஞாபகம் வச்சு நடந்துகிட்டு தான் இருக்கேன். அவரை விட்டு நான் சாப்பிடுறதில்ல. அவர் சொல்லிக் கொடுக்கிற படத்தை எல்லாம் நல்லா படிக்கிறேன்"

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now