24 ஒன்றுபட்ட மனங்கள்

2.2K 103 26
                                    

24 ஒன்றுபட்ட மனங்கள்

சுமித்ராவின் திருமணம் முடிந்த பிறகு கமலியை அவளது அம்மா வீட்டுக்கு அனுப்புவது என்று ஆதித்யாவை தவிர அனைவரும் சேர்ந்து ஒருமனதாக முடிவெடுத்தார்கள். அவள் இங்கு இருக்கப் போகும் இரண்டு நாளாவது அவளுடன் இருக்கலாம் என்று, ஏதேதோ சாக்கு சொல்லி வீட்டிலேயே இருந்து விட்டான் ஆதித்யா. அது கமலியை பதட்டப்படுத்தியது. ஆதித்யாவுக்கும் அவளது நடவடிக்கை குழப்பத்தை தந்தது.

கமலி, வழக்கம் போல் அவர்களது அறையில் இருக்கவில்லை என்றாலும், ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அடிக்கடி தங்கள் அறைக்குச் சென்று வந்தாள். அவனை நேரடியாக பார்ப்பதை தவிர்த்தாள் கமலி. அவனது கண்களை பார்த்து பேசும் அவளது பழக்கம், அடியோடு மாறிப் போனது.

ஆதித்யாவிற்கு ஒன்றையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் கமலி, கமலியை போல் நடந்து கொள்ளவில்லை. அவள் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை நன்றாய் உணர்ந்தான் ஆதித்யா. ஆனால் அவன் பார்க்கும் பொழுது, அவனை பார்க்காதது போல, வேறு எங்கோ தன் பார்வையை திருப்பிக் கொண்டாள் கமலி. இந்தப் பெண்ணுக்கு என்ன ஆனது? அவள் மனதில் என்ன தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவே முடிவதில்லை. அவளது பாவப்பட்ட மூளைக்கு ஏன் அவள் கொஞ்சம் கூட ஓய்வு கொடுப்பதில்லை? அவளுக்கு மட்டும் வித்தியாசமான பிரச்சனைகள் எங்கிருந்து தான் கிடைக்கிறதோ...! என்று எண்ணினான் ஆதித்யா.

வழக்கம் போல் அனைவரும், வரவேற்பரையில் அமர்ந்து தேனீர் அருந்திக் கொண்டு, தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். கமலியும் அவர்களுடன் தான் இருந்தாள். அவர்கள் யாரும் எதிர்பாராத வண்ணம், தனது மடிக்கணினியுடன் அங்கு வந்த ஆதித்யா, அவர்களுடன் அமர்ந்துகொண்டான்.

"உனக்கு ஏதாவது வேணுமா ஆதி?" என்றார் பாட்டி.

"இல்ல பாட்டி... ரூம்ல இருக்க போரடிச்சுது. அதான் இங்க வந்தேன்" என்றான், தேநீரை பருகியபடி அவனை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்த கமலியைப் பார்த்தபடி. அவனை பார்த்தவுடன் தன் பார்வையை தாழ்த்திக் கொண்டாள் கமலி. அதைப் பார்த்து உள்ளூர நகைத்துக் கொண்டான் ஆதித்யா. சரியான பைத்தியக்கார பெண் இவள்...  அவளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான் அவன்.

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)Where stories live. Discover now