என் சன்னல் வழியே,
உன் வாசம் வீசுவதேனடி?
மணல் வெளியினிலே,
என் பாதம் குளிர்வதும் ஏனடி?புத்தம்புது பனித்துளியாய்,
நீ மின்னுகையில் நான் உறைகிறேன்!
சத்தம் போடும் மழைத்துளியாய்,
நீ சிரிக்கையில் நான் உடைகிறேன்!பிரபஞ்சம் மொத்தமும் எனைச்சுற்றி வலம் வருதே,
எல்லாம் உன்னால் தானடி!
நெஞ்சம் எங்கிலும் சிறு பூக்கள் பூத்திடுதே,
இனி என்செய்வேனடி?கடலலைகளிலே உந்தன் நினைவலைகளும்,
ஓயாது வந்தென்னை மோதிடுதே!
உடல்வழியே எந்தன் உயிர்ச்சுவர்களுக்குள்,
உன்னை என் மனம் அடைத்திடுதே!என் பார்வையில்,
மொத்த வுலகும் சுருங்கி,
நீயாகி நடந்திடக் கண்டேனே!
ஆழ் பரவையே,
காதல் பேரலையாய் என்மேல் வீசடி!!
YOU ARE READING
கவிக்கிளை
PoetryPoetry works from my writings. இப்புத்தகம் நான் எழுதிய பல கவிதைகளில் மிகவும் விருப்பமானவற்றை தொகுப்பாகக் கொண்டிருக்கும்! உங்கள் நினைவுகள், எண்ணங்கள், கனவுகள், உணர்வுகள்... எல்லாவற்றிலும் நுழையும் ஆற்றல் இக்கவிதைகளுக்கு உண்டு! வாங்கள் தமிழின் இனிப்பா...