எனது இருதயத்தில் நின்றாயே!
மௌனமாய் என்னை வென்றாயே!நீ மீன்களின் இனத்தவளோ?
நழுவியே கண்முன் ஓடுகிறாயே!
நீ மின்னலின் ஒளித்துகளோ?
விழுந்த மனதை உடைக்கிறாயே!எனதாசை வாசமே!
உனதருகில்,
திணறுதென் சுவாசமே!
உடனிருந்தால்,
அனைத்தும் கைவசமே!ஆண் நெஞ்சை கேட்காமல் எடுத்தவளே!
உன் நெஞ்சை எனக்கு தர மறுப்பதேனோ?
என் உலகை தலைகுப்புற போட்டவளே!
கண் பார்வை வீச இன்னும் தயக்கம் ஏனோ?இசையடி, உன் சிணுங்கல்கள்!
திசையடி, உன் பார்வைகள்!
வரமடி, உன் சிரிப்புகள்!
தூரமடி, நம் பாதைகள்!வாழும் ஒவ்வொரு நொடி...
நீயே என் ஜீவ நாடி!
YOU ARE READING
கவிக்கிளை
PoetryPoetry works from my writings. இப்புத்தகம் நான் எழுதிய பல கவிதைகளில் மிகவும் விருப்பமானவற்றை தொகுப்பாகக் கொண்டிருக்கும்! உங்கள் நினைவுகள், எண்ணங்கள், கனவுகள், உணர்வுகள்... எல்லாவற்றிலும் நுழையும் ஆற்றல் இக்கவிதைகளுக்கு உண்டு! வாங்கள் தமிழின் இனிப்பா...