மழை மேகம் வந்து,
கண்ணோடு விளையாடும் போது,
பிழையில்லா புதுங்கன்று,
மண்ணோடு உறவாடும் போது,
நகமும் சதையும் கொண்ட உறவில்,
விரிசலுக்கு இடமேது?இளவேனில் வாசம் பட்டு,
வரைந்த ஓவியம் ஒன்று,
உயிரோடு எழுந்து வந்து,
கண்முன் நின்றாடுது!தீஞ்சுவை தீட்டி வைத்து,
நடமாடும் நறுமணமே!
செல்லெல்லாம் உட்புகுந்து,
சில்மிஷம் செய்யும் பூவினமே!கண்ணுக்குள் நுழைந்து,
இதயம் சேரும் அதிசயமாய்,
புதியதாய் பூத்த சிறுமலரே!
கேளாயோ எந்தன் நற்கவியை?
ESTÀS LLEGINT
கவிக்கிளை
PoesiaPoetry works from my writings. இப்புத்தகம் நான் எழுதிய பல கவிதைகளில் மிகவும் விருப்பமானவற்றை தொகுப்பாகக் கொண்டிருக்கும்! உங்கள் நினைவுகள், எண்ணங்கள், கனவுகள், உணர்வுகள்... எல்லாவற்றிலும் நுழையும் ஆற்றல் இக்கவிதைகளுக்கு உண்டு! வாங்கள் தமிழின் இனிப்பா...