கவிதையில் காதல் வடியுதடி!
பாதையில் தருக்கள் எரியுதடி!இதயத்தின் வாசனைப் பூவே!
ஆசையாய் ஓர் பார்வை தான் பாராயோ?
வீசிடும் பூங்காற்றினில் மிதந்து வாராயோ?என்னையே இழந்தேனே உன்னிடத்தில்...
தாராயோ ஒளியை என் மன இருட்டில்?காற்றினை அடக்கிட முயல்கிறாய்,
காதலை ஒப்புக்கொள்ள மறுக்கிறாய்!உனது அலட்சியப் பார்வை நான் சுவாசிக்கப் போதுமே!
வாடும் இதயத்திற்கு இதழ் முத்தம் வேண்டுமே!
கடுங்காட்டில் நான் தனியே அலைந்தது போதுமே!
வழியெங்கும் விரல் சேர்த்து நீ வர வேண்டுமே!கண்களை மூடிக் கொண்டு நடப்பவளே!
காதல் இல்லை என்று நடிப்பவளே!
இரு இதயம் இணைந்தது காலம் அறியும்!
உன் மனதில் நானிருப்பது எனக்குத் தெரியும்!வீடு சேர்ந்த பின் கண்ணாமூச்சி ஏனடி?
மூடு பனியை உடைத்து தான் போடடி!
YOU ARE READING
கவிக்கிளை
PoetryPoetry works from my writings. இப்புத்தகம் நான் எழுதிய பல கவிதைகளில் மிகவும் விருப்பமானவற்றை தொகுப்பாகக் கொண்டிருக்கும்! உங்கள் நினைவுகள், எண்ணங்கள், கனவுகள், உணர்வுகள்... எல்லாவற்றிலும் நுழையும் ஆற்றல் இக்கவிதைகளுக்கு உண்டு! வாங்கள் தமிழின் இனிப்பா...