சாந்தினி மற்றும் ஆத்விக்கும் சென்னை ஏர்போர்ட்டில் இறங்கியதும் , அவர்களை கணேஷ் வரவேற்று வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போக ,
இவர்களைப் பார்க்க ஊர் மக்கள் திரண்டு நிற்பதை பார்த்தவன் என்னம்மா இவங்க எல்லாரும் இப்படி நின்று என்னையே பார்த்துட்டு நிற்குறாங்க .
இந்த காலத்துல கூடவா இப்படி வேலை வெட்டி இல்லாம அடுத்தவங்க என்ன செய்யுறாங்க என்று பார்த்துக் கொண்டு நிற்பாங்க . டேய் கண்ணா தப்பா பேசாதடா அவங்க ஒரு ஆர்வத்துல பாக்குறாங்க .
நீ இதையெல்லாம் கண்டுக்காம இரு .எங்களுக்கு இதெல்லாம் பழக்கம் தான் . நீ புதுசு இல்லையா அதுதான் உனக்கு இப்படி தோணுது .
வீட்டின் முன் கார் நின்றதும் பாட்டியும் தாத்தாவும் அவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க , கிராண்ட்பா கிரானி நல்லா இருக்கீங்களா ?
எங்களுக்கு என்னடா நாங்க நல்லா இருக்கோம் . ஆனா நீ தான் 14 வருஷம் கழிந்து இப்ப வந்து இருக்க . சாந்தினி சும்மா சொல்லக்கூடாது எங்க பேரன் சும்மா ஹீரோ மாதிரி இருக்கான் .
அவனுக்கு என்ன , உங்க மருமகன் சம்பாதித்து கோடி கோடியா வச்சிருக்கார் . அதை செலவழித்து சந்தோஷமாக இருக்கான் . மாம் என்ன நீங்க என்னைப் பற்றி இப்படி தர குறைவா கிரானி கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க .
கிரானி உங்க மருமகனுக்கு கம்பெனில பாதி வேலை செய்வதே நான் தான் தெரிஞ்சுக்கோங்க . எவ்வளவு நேரம் தான் வீட்டுக்கு வெளியே நின்று பேசிட்டு நிற்ப உள்ளே போவோம் .
கிரானி... என்ன பேராண்டி , நான் முன்னாடி வரும்போது உங்ககிட்ட என்ன சொன்னேன் . இந்த வீட்டை இடிச்சிட்டு பெருசா கட்ட சொன்னேனா இல்லையா ?
எங்க இரண்டு பேருக்கும் வயசாயிற்று . எங்களுக்கு இருக்கிறதோ ஒரே மக . நீயாவது வருஷத்துக்கு ஒரு முறை வந்தாலாவது இடிச்சி பெருசா கட்டி இருப்போம் .
நீ பிறந்ததிலிருந்து மூன்று முறை மட்டும்தான் இங்கு வந்த . இப்ப உன் கல்யாணம்னால வந்து இருக்க . கல்யாணம் நல்லபடியா முடிந்து நீங்க கிளம்பி போன பிறகு நீ எப்ப வருவியோ அது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம் .
![](https://img.wattpad.com/cover/340745857-288-k843985.jpg)
YOU ARE READING
நெஞ்சோரம் உன் கண்ணீர் துளி
Romanceடேய் கண்ணா மூன்று மணி நேரம் தொடர்ந்து ஓர்க் அவுட் செய்துவிட்டு இருக்க உன் உடம்புக்கு எதாவது ஆயிடும்டா. அம்மா சொல்றதை கேளுடா கண்ணா இந்த குடி, கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்தறது எல்லாம் நிப்பாட்டிவிட்டு, நான் உனக்கு பார்த்து வைத்திருக்க பெண்ணை கல்யாணம...