ஏய் அழகையை நிப்பாட்டு . இனி ஒரு முறை உன் அழுகை சத்தம் கேட்டது அப்புறம் மீண்டும் என்னை ஒரு முறை மிருகமா தான் பார்ப்ப . என் பக்கத்திலேயே படுக்காத பக்கத்து ரூமுக்கு போ .
இல்ல நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது . அவனை கண்களில் மிரட்சியுடன் பார்த்தவள் கஷ்டப்பட்டு எழும்பி பக்கத்து அறைக்கு போய் படுத்து அழுது கொண்டே தூங்கி விட ,
காலையில் எழுந்த சாந்தினி தன் மருமகள் வெளியே வராமல் இருப்பதை பார்த்தவர் புன்னகை முகத்துடன் காபி போட கிச்சனுக்கு செல்ல , 8 மணிக்கு எழுந்து வந்த சபரிக்கு காபி கொடுத்தவர் ,
தன் கணவனுடன் சேர்ந்து காபி அருந்தி கொண்டே நேற்று நடந்ததை பற்றி சொல்ல , சாந்தினி எனக்கென்னமோ நம்ம மகனால பெரிய பிரச்சனை வரும் போல இருக்கு .
என்ன சொல்றீங்க சபரி ? ஆமா.. நிச்சயமா நம்ம மகனால நம்ம மருமகளுக்கு பிரச்சினை தான் வரப்போகுது . ஏங்க நானே கலக்கத்தில் இருக்கேன் நீங்க வேற என்னை பயம் காட்டாதீங்க .
குட் மார்னிங் மாம் ...குட் மார்னிங் கண்ணா ...ஆரா எங்க ? என்னைக் கேட்டால் எனக்கு என்ன தெரியும் . என்னடா சொல்ற ? அவளை இன்றைக்கு நாங்க பார்க்கவே இல்லை .
நாங்க நினைத்தோம் தூங்கிட்டு இருக்கான்னு . நீ அவ எங்க இருக்கான்னு தெரியாதுன்னு சொல்ற . மாம் அவளை பற்றி கேட்டு என்னை எதுக்கு டென்ஷன் படுத்துறீங்க .
டேய் என் மருமக எங்கடா ? இத பாருங்க டேட் என்கிட்ட இப்படி சத்தம் போடுவதை நிப்பாட்டுங்க . நான் அவளை பக்கத்து ரூம்ல போய் படுக்க சொன்னேன் . ஒரு வேளை அவ அங்க தூங்கிட்டு இருக்கலாம் .
எதுக்குடா தாலி கட்டின மனைவியை பக்கத்து ரூம்ல போய் படுக்க சொன்ன ? டாட் .. முதல்ல என் பிரைவசில தலையிடறதை நிப்பாட்டுங்க . ஏங்க அவன்கிட்ட பேசறதை நிப்பாட்டுங்க .
நான் ஆராவை போய் பார்த்துட்டு வாரேன் . சாந்தினி அந்த இடத்தை விட்டு அகன்றதும் சபரி தன் மகனை பார்த்து முறைக்க , உப்ஸ்.. டாட் இப்படி என்னை பார்ப்பதை நிப்பாட்டுங்க .
![](https://img.wattpad.com/cover/340745857-288-k843985.jpg)
YOU ARE READING
நெஞ்சோரம் உன் கண்ணீர் துளி
Romanceடேய் கண்ணா மூன்று மணி நேரம் தொடர்ந்து ஓர்க் அவுட் செய்துவிட்டு இருக்க உன் உடம்புக்கு எதாவது ஆயிடும்டா. அம்மா சொல்றதை கேளுடா கண்ணா இந்த குடி, கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்தறது எல்லாம் நிப்பாட்டிவிட்டு, நான் உனக்கு பார்த்து வைத்திருக்க பெண்ணை கல்யாணம...