அத்தியாயம் 6

224 6 0
                                    

என்னடா  இது என் மகன் புதுசு புதுசா என்னென்னமோ சொல்றான் . என் மகனுக்கு என்னை கண்டாலே ஆகாதே . இங்க வந்தவுடன் என் மேல பாசமழையை பொழிகிறான் .

இவன் என் மகன்தானா... இல்ல... அவன் உருவத்தில் இருக்கிற வேறு யாரோவா ! என்ன சபரி உங்க மகனையே புதுசா பார்க்கிற மாதிரி பார்த்துட்டு நிற்கிறீங்க ? இல்ல சாந்தினி இவன் பிறந்ததிலிருந்து ஒரு நாள் கூட என்கிட்ட பாசமா இருந்ததில்லை .

ஆனா இன்றைக்கு அவனே ஓடிவந்து கட்டி பிடிக்கிறான் . பாசமா பேசறான் என்னால நம்பவே முடியல . இவன் நம்ம பையன் தானா என்று யோசித்துக் கொண்டு நின்றேன் .

வேறு ஒன்றும் இல்லை . அவனுக்கு இங்க பேச்சு துணைக்கு யாரும் இல்ல . அதான் உங்களை தேடி இருப்பானா இருக்கும் . அப்படித்தானே கண்ணா ? யெஸ் மாம் .

டேட் இங்க ஒரே கூட்டமா இருக்கு . என்னால சரியா மூச்சு கூட விட முடியல . நீங்க எப்ப வருவீங்க என்று காத்துட்டு இருந்தேன் தெரியுமா .

ஆங்...சபரி வாயை பிளக்க , டேட் க்ளோஸ் யுவர் மவுத் .

எதுக்கு இப்ப ஷாக் ஆகுறீங்க . இல்லடா நீ உண்மையிலேயே என் மகன் தானா . நான் உங்க மகன் தான் . டாட்….  .‌என்னடா கல்யாணம் முடிந்து அடுத்த நாளே இங்கே இருந்து கிளம்பி போகணும் .

அதுக்கு ஏதாவது செய்யுங்க . அது எப்படிடா கல்யாணம் முடிந்த அடுத்த நாளே கிளம்ப முடியும் . என் மருமக பாவம் இல்லையா ?

ஓ  ஷிட்  சில்லியா பேசாதீங்க டேட் , என்னால இங்க இருக்கவே முடியல . எப்பவும் யாராவது வந்து என்னை பார்த்து கொண்டு இருக்கிறார்கள் . அவங்க முன்னாடி ஷோகேஸ் பொம்மை மாதிரி என்னால நிற்க முடியல .

ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் டேட் ,  சரிடா புலம்பாத கல்யாணம் நல்லபடியா முடியட்டும் . பிறகு நீ சொன்னதை பற்றி யோசிக்கிறேன் . நீ கட்டிக்க போற பொண்ணை போய் பார்த்தியா ?

நோ டேட் ,  அவளை பார்த்து நான் என்ன செய்யப் போறேன் . என்ன சாந்தினி நம்ம மகன் இப்படி பேசுறான் .  நீங்க இப்ப கேட்டதை என் அம்மாவும்  இவன் கிட்ட கேட்டாங்க .

நெஞ்சோரம் உன் கண்ணீர் துளிTahanan ng mga kuwento. Tumuklas ngayon