கரிசல் மண்ணில் விழுந்த மழை துளி போல எண்ணில் வந்து விழுந்தவளே ....
தடம் மாறி சென்ற என் வாழ்க்கையில் தடம் பதித்து போனவளே..
ஆணுக்கும் வெட்கம் வரும் என்பதை உன் கண்கள் பார்த்து என் தலை குனிந்து தெரிந்து கொண்டேனடி......
புள்ளி வைத்த கோலமாய் நீ பார்த்த பார்வையில் அலை பாயந்து போகுதடி என் மனசு...
ஈசல் போல ஒரு நாள் போதுமடி உன்னோடு வாழ......
மறுகணமே உயிர் நீப்பேனடி உன் கணவனாக....உடல் மட்டும் சேர வேண்டும் என்று நினைத்தால் எப்போதோ சேர்ந்து இருப்பேன்.....
ஆனால் உன் உணர்வுகளோடு சேர நினைத்ததால் இன்று வரை காத்திருக்கிறேன் உன் காதலனாக........😔