வலியின் உளியால் செதுக்கப்பட்டவளே
உயிரின் ஆதாரமாக இருப்பவளே நீ பட்ட துயரங்கள் தான் எத்தனை
உன் பெயர் மட்டுமே இங்கு பரைசாற்றப்படுகிறது
ஆனால் உனக்கு எதுவும் கிடையாது
கோவிலின் கருவறையில் மட்டுமே உன்னை கடவுளாக பார்க்கிறது ஆனால் நிஜத்தில் இந்த உலகம் உன்னை வெறும் காட்சி பொருளாக தான் பார்க்கிறது
மெளனம் காத்தது போதும் பெண்ணே கிணற்றில் போட்ட கல்லாக இருக்காதே எண்ணெயில் போட்ட கடுகாக இரு...
உன்னை ஏளனம் செய்தவர்கள் முன் வாழ்ந்து காட்டு
சரித்திரம் படைத்த பெண்கள் எல்லாம பல சோதனைகள் கண்டவர்களே பெண்ணே நீ சோதனைகளை சாதனையாக மாற்று.....