💜02💜

3K 131 9
                                    

"வாங்க வாங்க... ஏன் இவ்வளவு தாமதம்." என்று மண்டபத்திற்கு வந்தவர்களை வரவேற்றனர் ராஜ்குமார் மற்றும் மைதிலி தம்பதியினர்.

"மைதிலி ஆன்டி, இதோ இந்த தாரா தான் லேட் பண்ணிட்டா... ஆமா அர்ஜுன் எங்க? " என்று தருண் கேட்க...

"அவன் காலையில தான் ஊர்ல இருந்து வந்தான் பா. அவன் ரூம்ல தயாராகிக்கொண்டு இருப்பான். நீ போய் பாரு அவன. ரூம் நம்பர் 12."

"ஓகே. சரி நான் போய் பார்த்துக்கிறேன்." என்று தாராவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அர்ஜுனின் அறையை தேடி நடந்தான்.

"தருண், இப்ப எதுக்கு என்ன புடிச்சு இழுத்துட்டு போயிட்டு இருக்க? நான் வரல. நீ போயிட்டு வா." என்று  கத்தினாள் தாரா.

" இப்போ எதுக்கு இப்படி கத்தர?
உனக்கும் அர்ஜுனுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை? நீ ஏன் அவன் பெயர கேட்டாலே டென்ஷன் ஆகற? எனக்கு இன்னைக்கு தெரிஞ்சாகணும்."

"அதைப்பற்றி நான் உன்கிட்ட சொல்லமாட்டேன் என்று நாலு வருஷத்துக்கு முன்னாடியே சொல்லிட்டேன். திரும்பத் திரும்பக் கேட்டு என்ன கடுப்பேத்தாத."

"என்ன விஷயம்னு நீயும் சொல்ல மாட்டேங்குற. அவனும் என் கூட சரியா பேசுறதே இல்லை."

"அவன் உன்கிட்ட பேசலனா அதுக்கு நான் என்ன பண்றது?"

"என்னடி இப்படி பேசுற? அவன் நம்மளோட உயிர்த்தோழன். அஞ்சு வயசுல இருந்து நாம ஒண்ணாவேதான வளர்ந்தோம். நம்ம கூடவே இருந்த ஒருத்தன உன்னால எப்படி திடீர்னு வெறுக்க முடியுது...?"

"ம்ம்ம்... அதுக்கு?"

"ஏதோ முன்ன பின்ன தெரியாத ஆள் மாதிரி நீ அவன பேசுற. அவனும் கடந்த  நாலு வருஷமா என்னைய அவாய்ட் பண்ணிட்டு இருக்கான்."

"அவன்தான் அவாய்ட் பண்றான்ல. அப்புறம் நீ மட்டும் ஏன் அவன தேடி தேடி போய் பேசி அசிங்கப்படர?"

"என்ன இருந்தாலும் அவன் என்னுடைய நண்பன். அவன அப்படி எல்லாம் நான் விட்டு தர மாட்டேன். "

காதலும் கடந்து போகும்💘Where stories live. Discover now